இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

வித்தைக்குரங்கு


சிவப்புத் துணியிலே மேல்சட்டை, நீலத் துணியிலே கால் சட்டை, பச்சைத் துணியிலே குல்லா - இப்படி வண்ண வண்ண உடையுடன் காட்சியளித்த அந்தக் குரங்கு, கோவிந்தசாமி சொன்னபடியெல்லாம் செய்யும்.

கோலை நீட்டினால் தாவும், குட்டிக் கரணம் போடும்; மாடு மேய்ப்பவரைப் போலப் பிடரியிலே கோலை வைத்துக் கொண்டு நிற்கும்; தாத்தா மாதிரி தடியை ஊன்றித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும். பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

வித்தை முடியப் போகிற சமயம், “ரங்கா, சுத்தி நிற்கிற புண்ணியவான்களெல்லாம் உன் வித்தையைப் பார்த்துட்டுச் சும்மா போக மாட்டாங்க. தாராளமாகக் காசு கொடுப்பாங்க, அவங்க தரதைச் சலாம் போட்டு வாங்குடா ரங்கா” என்பார் கோவிந்தசாமி.

உடனே ரங்கன் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு சலாம் போட்டபடி சுற்றிச் சுற்றி வரும். ‘ஆஹா! ஒஹோ’ என்று வேடிக்கை பார்த்தவர்களில் பலர், மெல்ல நழுவி விடுவார்கள்; சில பேர் தான் காசு போடுவார்கள். அதுவும் பெரும்பாலும் ஐந்து பைசாவாகத்தான் இருக்கும்.

ஒரு நாளைக்கு குவளையிலே விழுகிற சில்லறைகளையெல்லாம் சேர்த்து எண்ணிப் பார்த்தால், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கிடைக்குமோ, அதிலே சரி பாதிக்குப் பொரி, கடலை, தேங்காய்க் கீற்று, வாழைப் பழம். இப்படி ரங்கனுக்குப் பிடித்ததாகப் பார்த்து வாங்கிக் கொடுத்திடுவார் கோவிந்தசாமி. இன்னொரு பாதிப் பணத்திலே அவருக்குத் தேவையான சோறு, பலகாரம், டீ, வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வார். தமக்கென்று அதிகமாக எடுத்துக் கொள்ளவே மாட்டார்!

ரங்கனை அவர் சொந்தப் பிள்ளை மாதிரியே வளர்த்து வந்தார். சில சமயம் அதை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு, “ரங்கா, இந்த வயசான காலத்திலே எனக்கு யாரு இருக்கிறாங்க? நீதான் நான் பெத்த பிள்ளை மாதிரி சம்பாதிச்சு என்னைக் காப்பாத்தறாய்” என்று பாசத்தோடு கூறுவார்.

ரங்கனுக்கும் கோவிந்தசாமியிடத்திலே மிகுந்த பிரியம்தான். ஆனாலும் நடுநடுவே அதற்கு ஓர் ஆசை வந்து விடும்!

தினமும் கடைவீதி வழியாகப் போகும்போது, அங்கே கடைகளில் குவியல் குவியலாக இருக்கிற பொரி, பட்டாணிக் கடலை, பொட்டுக் கடலை, வேர்க்கடலை, தேங்காய், சீப்புச் சீப்பாகத் தொங்குகிற வாழைப்பழங்கள் முதலியவற்றையெல்லாம் பார்க்கும். உடனே நாக்கிலே எச்சில் ஊறும்.

‘சே, என்ன பொழைப்பு? நான் தினமும்தான் வித்தை செய்கிறேன். குவளை நிறையக் காசு விழுந்தாலும், நான் ஆசைப்படுகிற பொருளை நினைச்ச நேரத்திலே நினைச்ச அளவு தின்ன முடிகிறதா? இவருகிட்டே இருக்கிற வரை இப்படியே இருக்க வேண்டியதுதான். இஷ்டம் போலச் சாப்பிட முடியாது’ என்று அடிக்கடி நினைக்கும்.

அன்று அமாவாசை. நல்ல இருட்டு. கோவிந்த சாமி, பிள்ளையார் கோயில் மண்டபத்திலே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்திலே படுத்திருந்த ரங்கனுக்குத் தூக்கம் வரவில்லை. மெதுவாக இடத்தை விட்டு எழுந்தது. சந்தடியில்லாமல் காலை எட்டிப் போட்டது. கொஞ்ச தூரம் போனதும், குடுகுடு என்று ஓட்டம் பிடித்தது. அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டது!

நடுவிலே இருந்த சின்னச் சின்ன ஊர்களைத் தாண்டி ஒரு நகரத்துக்கு வந்தது. அப்போது விடிந்துவிட்டது. காலையிலேயே வெயில் மிகக் கடுமையாக இருந்ததால், கால் சட்டைப் பைக்குள்ளிருந்த குல்லாயை எடுத்துத் தலையிலே மாட்டிக் கொண்டது ரங்கன்.

நகரத்துக்குள்ளே நுழைகிற போது, அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதிலே காய்களும், பழங்களும் ஏராளமாகத் தொங்கின. அத்துடன், அந்த மரத்திலே ஏழெட்டுக் குரங்குகள், குட்டிகளோடு இருந்தன. உடனே ரங்கனுக்குக் குஷி பிறந்து விட்டது.

ஒரே தாவாகத் தாவி, அந்த மரத்திலே ஏறியது. சட்டையும், குல்லாயுமாக வந்த ரங்கனைக் கண்டதும், அதை யாரோ என்று நினைத்துவிட்டன அந்தக் குரங்குகள்!‘உர். உர். உர்” என்று கத்தி, அதை அடித்து விரட்டி விட்டன.

‘நானும் குரங்கு. அதுகளும் குரங்குகள். என்னைப் பார்த்ததும் ஏன் இப்படிக் கத்தனும்? ஓட ஒட விரட்டனும்?. ஓ! புரியுது, புரியுது. என் உடையைப் பார்த்துத்தான் விரட்டியிருக்கணும் என்று நினைத்தது. உடனே குல்லா, மேல் சட்டை, கால் சட்டையெல்லாவற்றையும் கழற்றி அங்கேயிருந்த ஒரு கால்வாயிலே தூக்கி எறிந்தது.“இந்த உடுப்பும் வேண்டாம். நம்ம குரங்கு இனமும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஊருக்குள்ளே ஓடியது.

வழியிலே ஒரு கடைவீதி இருந்தது. அங்கே ஒரு பொரிகடலைக்கடை இருந்தது. கடையிலே யாருமே இல்லை. போன வேகத்திலே, அந்தக் கடைக்குள்ளேப் புகுந்தது. அங்கே கோபுரம் போல், கொட்டி வைத்திருந்த பொரியை இரண்டு கைகளாலும் அள்ளி வாயிலே திணிக்கப் பார்த்தது. அப்போது, சற்றுத் தூரத்திலிருந்து குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர் பார்த்து விட்டார். சும்மா இருப்பாரா? ‘பிடி! பிடி!’ என்று கத்திக் கொண்டே கடையை நோக்கிப் பாய்ந்தோடி வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! பொரியைக் கீழே எறிந்துவிட்டு ரங்கன் தலைதெறிக்க ஓடியது.

கடைக்காரர். அப்போதும் சும்மா இருக்கவில்லை. தெருவிலே கிடந்த ஒரு கல்லை எடுத்து ரங்கனைக் குறிபார்த்து எறிந்தார். கல், ரங்கன் முதுகிலே பட்டதும், வலி தாங்காமல் ‘கீ, கீ’ என்று கதறிக்கொண்டே ஓடிவிட்டது.

அன்று முழுவதும் ரங்கன் வெளியில் தலை காட்டவே இல்லை. சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் ஏறி, இரண்டு கிளைகளுக்கு நடுவே உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாவம், அன்று முழுவதும் பட்டினி!


மறுநாள் காலையிலே மரத்துக்கு மரம் தாவி, சுவர்கள் மீது ஏறி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு கிழவி, ஒரு மரப்பலகையில் தேங்காய்க் கீற்றுகளை அழகாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டது.

ரங்கன் சுவரிலிருந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. தேங்காய்க் கீற்றை எட்டி எடுக்கப் போனது. மறுவிநாடி டங்கென்று தலையில் பலமாக ஓர் அடி விழுந்தது! அந்தப் பொல்லாத கிழவிதான் காக்கை விரட்டுவதற்காகப் பக்கத்திலே வைத்திருந்த தடியாலே ஓங்கி அடித்து விட்டாள். வலி தாங்காமல், கத்திக்கொண்டே ரங்கன் வெறுங்கையோடு ஓடி மீண்டும் சுவரிலே ஏறிக் கொண்டது. அன்றைக்கும் பட்டினிதான்!

மூன்றாம் நாள் கோயில் பக்கமாகப் போய், மதில் சுவரிலே உட்கார்ந்து கூர்ந்து, கூர்ந்து பார்த்தது. கொஞ்சதுரத்திலே ஒரு பழக்கடை தெரிந்தது. அங்கே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் எல்லாம் இருந்தன. சிப்புச் சீப்பாய் வாழைப்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைக்காரர் அசந்த சமயம் பார்த்து ஒரு சீப்பு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து விடலாமென்று நினைத்தது ரங்கன்.

கடைக்காரர் பின்புறமாகத் திரும்பி, கூடையிலிருந்த பழங்களை எண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ரங்கன் ஒரே தாவாகத் தாவிப் பழக்கடைக்குள் புகுந்தது. ஒரு சீப்பு வாழைப்பழத்தைப் பிடித்து இழுத்தது.

அந்தச் சமயம், தெருவிலே நடந்து போன ஒருவர் சும்மா போகக் கூடாதா? “ஐயோ! குரங்கு! குரங்கு!” என்று கத்தினார். உடனே பழக் கடைக்காரர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். ரங்கன் பழத்தைப் போட்டுவிட்டு ஓடியது, ஆத்திரத்திலே பக்கத்தில் கிடந்த பழம் நறுக்குகிற கத்தியை எடுத்து ரங்கனைப் பார்த்து எறிந்தார். ரங்கனின் வால் நுனியிலே கத்தி பட்டு, ஓர் அங்குல நீளம் துண்டிக்கப்பட்டது!

ரங்கன் கதறிக்கொண்டே, நாலு கால் பாய்ச்சலில் ஓடியது. வலி பொறுக்காமல் துடியாய்த் துடித்தது. வெகு தூரம் சென்று ஓர் ஆலமரத்தில் ஏறி வாலைப் பார்த்தது. வால் வெட்டுப்பட்டு இரத்தம் கொடகொட வென்று கொட்டுவதைக் கண்டு மிகவும் கலங்கி விட்டது. இரத்தம் மேலும் வழியாமல், வெட்டுப்பட்ட இடத்திலே கையை வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. வெகு நேரம் சென்று பார்த்தது. இரத்தம் கசிவது நின்று விட்டது.

ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு அப்போதுதான் கோவிந்தசாமி நினைப்பு வந்தது.

‘அவர் என்னிடத்திலே எவ்வளவு பிரியமாயிருந்தாரு! எப்படிப் பாசத்தைக் காட்டினாரு நான் இந்த மூணு நாளாப் பட்டினி கிடக்கிறேன். அவர் ஒரு வேளையாவது என்னைப்பட்டினி கிடக்க விட்டிருப் பாரா? ஒருத்தர் என் முதுகிலே கல்லால் அடிச்சாரு. ஒரு பாட்டி என் தலையிலே தடியால அடிச்சாள். கடைசியிலே, பழக்கடைக்காரர் என் வாலையே வெட்டிட்டாரே! என் எஜமான் என்னை ஒரு நாளாவது அடிச்சிருப்பாரா? திட்டினது கூட இல்லையே! பிள்ளை மாதிரி வளர்த்தாரே! அவருக்குத் தெரியாமல் ஓடி வந்திட்டேனே! என்னைக் காணாமே அவர் துடிதுடிச்சிருப்பாரே! இந்தத் தள்ளாத வயசிலே அவர் எப்படி இருக்கிறாரோ? இனி ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்கப்படாது.”

மறுவிநாடி ரங்கன் மரத்திலிருந்து கீழே குதித்தது. குடுகுடுவென்று ஓடியது. முன்பு இருந்த கொட்டாம்பட்டிக்கு வந்து, கோவிந்தசாமி வழக்கமாயிருக்கிற மண்டபத்திலே பார்த்தது. அங்கே கோவிந்தசாமியைக் காணோம்! ஊரெல்லாம் தேடிப் பார்த்தது.

ஊருக்குக் கடைசியிலேயிருந்த ஓர் அரச மரத்தடியிலே கோவிந்தசாமி தூங்குவதைப் பார்த்து விட்டது அதற்கு ஒரே ஆனந்தம்! மெதுவாக அவர் பக்கத்திலே போய் உட்கார்ந்தது.

‘பாவம், நல்லாத் தூங்கறாரு எழுப்பக் கூடாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது.

அரைமணி நேரம் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அருகிலே அமைதியாக இருந்தது. படுத்திருந்த கோவிந்தசாமி "ரங்கா!ரங்கா" என்று கத்திக்கொண்டே எழுந்தார். எதிரிலே ரங்கனைக் கண்டதும், “ஆ! இப்பத்தானேடா உன்னைக் கனவிலே கண்டேன்! நேரிலே வந்துட்டியே!” என்று கூறி அதைக் கட்டிப்பிடித்து மடியிலே தூக்கி வைத்துக் கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.

‘எங்கேடா போனாய். என்னைத் தனியா விட்டுட்டு? உன்னைக் காணாமே எங்கெங்கே தேடினேன்? யாரை, யாரையெல்லாம் விசாரிச்சேன்! நல்லவேளை, நீயே திரும்பி வந்...” கூறிக் கொண்டிருக்கும் போதே, ரங்கனின் வால் அவர் கண்களில் பட்டது.


“ஐயோ! இது என்ன? என் ரங்கனின் வாலை எந்தப்படுபாவியோ வெட்டிட்டான்?” என்று ஆத்திரமும், கோபமும் கலந்த குரலில் கூறி, வாலைப் பிடித்து மெல்லத் தடவிக் கொடுத்தார்.

பிறகு, ரங்கனைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலே இருந்த ஒரு கடைக்குப் போனார். இரண்டு நாளாக மூட்டை தூக்கிச் சம்பாதித்து வேட்டியிலே முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்தார். ஒரு டஜன் வாழைப்பழம் வாங்கி ரங்கனுக்கு அன்போடு ஊட்டி விட்டார். பக்கத்திலே கடலை விற்ற அம்மாளிடம், அரைப்படி கடலை வாங்கி ஆசையாகக் கொடுத்தார். ரங்கன் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்.

மறுநாளே கோவிந்தசாமி ரங்கனைத் தனக்குத் தெரிந்த ஒரு தையற்காரரிடம் அழைத்துச் சென்றார். துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருந்த வண்ண வண்ணத் துணிகளிலே உடை தைத்து ரங்கனுக்குப் போட்டுவிட்டார் அந்தத் தையற்காரர். அழகாக ஒரு குல்லாயும் தைத்துத் தலையிலே மாட்டினார்.

இப்போது ரங்கன் முன்னை விட அருமையாக வித்தைகளெல்லாம் காட்டுகிறது. கூட்டமும் நிறையக் கூடுகிறது. பணமும் அதிகம் சேருகிறது!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1502.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License