Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

பகைவர்க்குப் பணிந்து மானத்தை இழக்கலாமா?


தென்பாண்டி நாட்டிலே திருமாவலி என்று ஒரு வீரன் இருந்தான். அவனுடைய வீரச்செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னர் அவனை அழைத்துத் தன் தானைத் தளபதிகளிலே ஒருவனாக அமர்த்திக் கொண்டார்.

மன்னரின் படைத்தளபதிகளிலே ஒருவனாகி விட்ட திருமாவலி, நல்ல உடற்கட்டுடையவன். பயில்வான் போன்ற பலமுடையவன். பாய்ந்து வரும் குதிரையை எதிரில் நின்று கையினால் பிடித்து அடக்கும் வல்லமை அவனிடம் இருந்தது. தன் முதுகினால் மூச்சைப் பிடித்து யானையின் விலாப்புறத்திலே உந்தித் தள்ளினால் யானை அப்படியேக் கீழே சாய்ந்துவிடும். வெறும் பலம் மட்டும் உடையவனல்லன் திருமாவலி; திறமையும் மிக்கவன். வாள் வீச்சிலும், வேல் விளையாட்டிலும் வில் வளைத்தலிலும் மிகத் தேர்ந்தவன்.

போர்க்களத்திலே அவன் ஒரு மதயானை போல் திரிந்து விளையாடுவான். அவன் தன் வீர விளையாட்டைத் துவங்கி விட்டால் பகைவர்கள் பதறியோடுவார்கள்.

திருமாவலி சிறந்த போர் வீரனாக இருந்ததோடு, இறைபக்தி மிக்கவனாகவும் இருந்தான். தொடுத்த போரிலெல்லாம் அவன் வெற்றி வாகையைப் பெற்று வர, அவனுடைய பலம் காரணமா? பக்தி காரணமா? என்று சொல்ல முடியாமல் இருந்தது.

ஒரு முறை தன் மனைவிக்கு நோய் வந்தபோது, இறைவனுடைய திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதாக திருமாவலி நேர்ந்து கொண்டான். மனைவி பிழைத்தெழுந்து பல நாட்களான பின்னும், அந்நேர்த்திக் கடன் செலுத்தப்படாமலே இருந்து வந்தது.

ஒரு நாள் அவன் மன்னரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தன் தல யாத்திரையைத் துவக்கினான்.

திருமாவலி தல யாத்திரை துவங்கிய செய்தியை ஒற்றர்கள் மூலம் சேர மன்னன் அறிந்தான். சேர மன்னன் திருமாவலியின் மேல் ஆத்திரம் கொண்டிருந்தான். ஏனெனில், திருமாவலியின் தலைமையில் வந்த படைதான், சேரநாட்டைப் பாண்டிய நாட்டுக்கு அடிமைப்படுத்தியது. பாண்டிய நாட்டை வெல்லக் கூடிய படைபலம் இல்லாததால், மீண்டும் போர் புரிந்து நாட்டை மீட்கக் கூடிய சக்தி சேரனுக்கு அப்போது இல்லை. ஆனால், தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள, திருமாவலியைப் பிடித்து வந்து அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

திருமாவலி, படைத் தளபதியாக இருக்கும் போது அவனைப் பிடிக்க இயலாது. ஆகவே, அவன் தல யாத்திரை போகும்போது பிடித்துவர ஏற்பாடு செய்தான் சேரன்.

சேரனிடம் அர்ச்சுனன் என்றொரு வீரன் இருந்தான். அவன் சூழ்ச்சியிலும் வாள் வீச்சிலும் வல்லவன். அவன் தலைமையில் பத்து வீரர்களை அனுப்பினான் சேர மன்னன். எப்படியும் திருமாவலியைக் கையோடு பிடித்து வரவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.

திருமாவலி ஒவ்வொரு தலமாகச் சென்று சிவ பெருமானை வழிபட்டுக் கொண்டு வந்தான். திருப்பெருந்துறை என்ற சிவத் தலத்திற்கு அவன் வந்தபோது, அர்ச்சுனனும் பத்து வீரர்களும் அவ்வூருக்கு வந்து சேர்ந்தனர்.


திருமாவலி, திருப்பெருந்துறை இறைவனை வணங்கி விட்டு வெளியில் வந்தான். அவனுடன் கூடவே இரு சிவனடியார்களும் வந்தனர். மூவரும் மற்றொரு திருத்தலத்தை நோக்கிக் காட்டுப் பாதையில் சென்றனர்.

காட்டின் நடுவே திடீரென்று அர்ச்சுனனும் பத்து வீரர்களும் சிவனடியார்களைச் சூழ்ந்து கொண்டனர். திருமாவலியின் தலையிலும் மார்பிலும் கவசமில்லை. உருத்திராக்க மாலையும் திருநீறும்தான் இருந்தன. கையில் வாள் இல்லை; திருநீற்றுப் பைதான் இருந்தது.

வீரர்களோ வாளை உருவிக் கொண்டு சூழ்ந்து நின்றனர். மற்ற சிவனடியார்கள் இருவரும் மிரண்டு நின்றனர்.

“பேசாமல் எங்கள் பின்னே வாருங்கள். தப்ப முயன்றால் உயிர் பறிபோகும்!”என்று எச்சரித்தான், அர்ச்சுனன். அவன் குரலைக் கேட்டவுடனே, அவன் போர்க்களத்திலே தன்னை எதிர்த்து நின்ற சேர நாட்டு வீரரிலே ஒருவன் என்று திருமாவலி கண்டு கொண்டான்.

அவனுக்குக் கோபம் கொப்பளித்தது. ஆனால், வாள் பிடித்த வீரர் பதினொருவர் முன், வாளைக் கண்டால் நடுங்கும் சிவனடியார் இருவருடன் நிற்கும் தான், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தான். பகைவன் கட்டளைக்குப் பணிந்து போவதா என்று அவன் வீர உள்ளம் கேள்வி போட்டது.

“வீரனே, நான் உன்னுடன் வர முடியாது. உங்களில் யாராவது ஒருவன் என்னுடன் மற்போரோ, வாட்போரோ செய்து தோற்கடித்து விட்டால், அதன்பின் வருகிறேன்!” என்று கூறினான் திருமாவலி.

“உன்னோடு இப்போது நாங்கள் போராட வரவில்லை; பிடித்துப் போகத்தான் வந்திருக்கிறோம். மேற்கொண்டு பேசாதே, நட!’ என்று ஆணையிட்டான் அர்ச்சுனன்.

“போராடும் நெஞ்சுறுதியற்ற உங்களுக்கு வாள் ஒரு கேடா ?” என்று சொல்லிக் கொண்டே திருமாவலி அர்ச்சுனன் மேல் பாய்ந்தான். சிவனடியார் இருவரும் திகிலுடன் ஒதுங்கி நின்றனர். அர்ச்சுனன் கூட வந்த பத்து வீரர்களும் திருமாவலியின் மீது பாய்ந்தனர். ஆயுதமற்ற ஒருவன் மீது வாள் பிடித்த பதினோரு வீரர் பாய்கிறோமே, இது சரிதானா ? வீரத்திற்கு அழகா? என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேயில்லை. கோழையான தங்கள் மன்னன் ஆணையை நிறைவேற்ற அவர்கள் பெருங்கோழைகளாக நின்று செயலாற்றினார்கள்.

திருமாவலி ஆள் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. அர்ச்சுனன் மீது பாய்ந்து அவனோடு போராடும் போது மற்ற பத்து வீரர்களும், தங்கள் வாள்களால் அவன் முதுகிலும் விலாவிலும் தாக்கிக் காயப்படுத்தினார்கள். அர்ச்சுனனை மடக்கி அவன் கைவாளைப் பறித்த பின் திருமாவலியை அந்தப் பதினோரு பேராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை! அவன் கைக்கு வந்த வாள், காற்றினும் வேகமாகச் சுழன்றது. எதிர்த்து நின்ற பகை வீரர்களை ஒவ்வொருவராகக் கொன்று தீர்த்தது.

பத்து வீரர்களும் செத்து மடிந்தார்கள். கடைசியில் அர்ச்சுனன்தான் மீந்திருந்தான். “அற்பனே, நான் உன்னை வாள் கேட்டேன். தர மறுத்தாய்! இப்போது நான் உனக்கு வாள் தருகிறேன். வா போராட!” என்று இறந்த வீரர்களின் வாளில் ஒன்றைத் துாக்கி அவனை நோக்கி வீசினான் திருமாவலி.

அர்ச்சுனனால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. விரைவில் அவனும் திருமாவலியின் வாள் வீச்சுக்குப் பலியானான்.

எதிரிகள் பதினொருவரும் இறந்து போயினர். ஆனால், திருமாவலியாலும் நிற்க முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டதால் அவன் பலவிடங்களில் படுகாயப்பட்டிருந்தான். அதனால் அவன் சோர்ந்து விழுந்தான்.

ஒதுங்கி நின்ற சிவனடியார் இருவரும் அவனருகில் ஓடிவந்தனர். இறக்கும் நிலையில் அவன் இருப்பதைக் கண்டு மனம் பதைத்தனர்.


அவர்களில் ஒருவர் அவனை நோக்கி, “திருமாவலி! பகைவர் எண்ணிக்கையைப் பார்த்த பிறகாவது ஒதுங்கியிருக்க வேண்டாமா? இப்போது உன் உயிர் போகப் போகிறதே! என்ன செய்வோம்?” என்று துடித்தார்.

“உயிரைப் பற்றிக் கவலைப்படுபவன் வீரனாயிருக்க முடியாது. பகைவர்க்குப் பணிந்து மானத்தையிழப்பதை விட, பதினொருவரைக் கொன்றேன் என்ற புகழோடு இறப்பது சிறந்தது. அதுதான் வீரம்! இந்த வீரம் உங்களுக்கு இல்லாவிட்டாலும், உங்கள் பிள்ளைகளுக்காவது இருக்கும்படி வளருங்கள் ! பாண்டிய நாடு வாழ்க!” என்று கூறிக் கொண்டே திருமாவலி கண்ணை மூடினான். அவனுடைய கடைசி மூச்சு அந்தப் பேச்சோடு நின்று விட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பாண்டிய மன்னன் கேள்விப்பட்டான்.

பகைவர்கள் யார் என்று தெரியாததால், எதுவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால், திருமாவலியின் குடும்பத்துக்கு வீர மானியங்களும், அவன் பிள்ளைகளுக்கு வீர விருதுகளும் வழங்கிச் சிறப்பித்தான்.

நன்றி: டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய “நல்வழிச் சிறுகதைகள்-2”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1535.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License