கணவனுக்கு வீட்டில் காப்பி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி.
உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.
அதைக்கண்ட கணவன் காப்பியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான்.
காப்பியை வீசினான்...
விளைவு...? சண்டை...
சந்தோசமான வீடு, அடுத்து மூன்று நாளில் துக்கவீடாக மாறிவிட்டது.
இதேச் சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.
அந்த வீட்டில் உள்ள கணவன் காப்பியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான்.
அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "நீ கொடுக்கும் காப்பிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காப்பிக்காக உயிரையேக் கொடுத்து விட்டது பார். இது போல் உன் ரசிகர்களை வீணாக இழந்து விடாதே..."
மனைவி சிரித்தாள். தன் தவறை உணர்ந்தாள்.
அதன்பிறகு அவர்கள் வீட்டுச் சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள். அதனால் காப்பியில் எறும்பு சாகவில்லை.
அவர்கள் வீட்டின் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை.