ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.
அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரம்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியைச் சேகரித்து வைத்திருந்தான்.
அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றின் கீழேச் சிறு ஒட்டை இருந்தது. அதில் இருந்து வந்த அரிசி வெளியேச் சிதறிக் கிடந்தது.
அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் அதைப் பார்த்தன. அங்கேச் சிதறிக் கிடந்த அரிசியை உண்டு பிழைத்து வந்தன.
இந்நிலையில் இரு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியிடம், “நாம் இந்த ஓட்டை வழியே உள்ளே சென்று விட்டால், நமக்கு நிறைய அரிசி கிடைக்கும். நாம் வேண்டும் அளவு உண்ணலாம் வா” என்றது.
அதனைக் கேட்ட மற்ற எலி, "பேராசை வேண்டாம். இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியே நமக்குப் போதும் " என்று கூறியது.
அந்த எலியின் பேச்சைக் கேட்காத முதல் எலி, அந்த ஓட்டையின் மூலம் உள்ளே சென்று, அரிசியைச் சாப்பிட ஆரம்பித்தது. அங்கேயேத் தங்கி விட்டது.
அந்த எலி, உள்ளே நுழையும் போது இருந்ததை விடப் பெருத்து விட்டது. அதனால், இப்போது அந்தச் சின்ன ஓட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.
ஒரு நாள் டிரம்மிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.
அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டு அதை அடித்துக் கொன்றான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பேராசை இல்லாத எலி பிழைத்தது. பேராசை கொண்ட எலி இறந்தது.