துறவி ஒருவர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.
வழியில், ஒரு மனிதரின் கால் வெட்டப்பட்டு கிடந்தது. அதில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
"ஐயோ! உங்கள் காலை மிருகம் ஏதேனும் கடித்து விட்டதா?'' என்று பரிதாபத்துடன் விசாரித்தார் முதல் துறவி.
"ஆம்!'' என்றவரிடம், "சிங்கமா, புலியா?'' என்று கேட்டார் முதல் துறவி.
"இரண்டும் இல்லை, மனம் என்னும் விலங்கு'' என்ற காலிழந்த துறவியைக் கேள்விக்குறியுடன் நோக்கினார் முதல் துறவி.
"ஆம் துறவியே! நான் இங்கே தவத்தில் ஈடுபட்டிருந்தேன். கடும் தவம்... நேற்று, தற்செயலாகக் கண் திறந்த போது, என் எதிரே ஒரு பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் தேவதை போலக் காணப்பட்டாள். செடிகளின் மறைவில் நின்ற அவளை எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆசை காரணமாக, நான் அவளை எட்டிஎட்டிப் பார்த்தேன்.
திடீரென என் மனசாட்சி பேசியது.
"தபஸ்வியான உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? போ! உன் காலை வெட்டிக் கொள், கால் இருப்பதால்தானே அருகில் போய் அவளைப் பார்க்கும் ஆசை வந்தது'' என்றது. உடனே என் காலை வெட்டி எறிந்து விட்டேன்'' என்றார்.