ரசியச் சிறையில் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் காலம் வந்தவுடன் அவர்களிடம் இறக்கும் முன், அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன? என்று கேட்கப்பட்டது.
முதல் கைதி, “நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்” என்று கூறினான்.
அவனது மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதி, “நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்” என்றான்.
அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ வரத்து இல்லை. எனவேத் தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப் பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.
அப்போது செர்ரிப் பழ வரவில்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான், '' என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்”
அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்.
''என்ன சொல்கிறாய், நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!''
கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்...”
புத்தி உள்ளவன் பிழைத்துக் கொள்வான்.