ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான், ''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை மட்டும் ஏற்பது போல, கெட்டதையும் ஏற்றால் என்ன?''
குரு சிரித்துக் கொண்டே, ''அது அவரவர் விருப்பம்'' என்றார்.
பகல் உணவு வேளை வந்தது.
அந்தச் சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டுச் சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.
சீடன் விழித்தான்.
குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்:
''பால், சாணம் இரண்டுமேப் பசு மாட்டிடம் இருந்துதானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும் போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?”