ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
‘கனமழை பெய்யும் வேளையில் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’
‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை. இது ஏன்’ என்று குரு வினவினார்.
சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாகக் கூறினர்.
‘ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’
‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’
பலவாறு விடைகள் வந்தன.
எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை.
‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’
பின்னர் அவர், ‘ஒருவரும் சரியான விடை கூறப்போவதில்லை’ என்றார்.
சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.
பின்னர் புத்தரேச் சொன்னார்.
‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’
இதற்கு விடை என்ன தெரியுமா?
இங்கு ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பதுதான் விடை.