இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

நாய் முகத் தொப்பி


சீனாவில் நாட்டுப்புறப் பகுதிகளில் சிறுவர்கள் அணிகின்ற தொப்பி அது. ஆனால் கொஞ்சம் விசித்திரமானது, வேடிக்கையானது. அந்தத் தொப்பியைக் குழந்தைகள் அணிவதற்கு என்ன காரணம்?

சீன மக்கள் அனைவருக்கும் அந்தக் கதை தெரியும்.

வெகு காலத்துக்கு முன்னர் ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இதிலே மூத்த சகோதரரும் அவரது மனைவியும் நேர்மையானவர்களாகவும், நிதானமும் பொறுமையும் கொண்டவர்களாகவும், தாராள நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கோக் குழந்தை கிடையாது.

அக்காலத்தில் சீன மக்கள் குழந்தைப்பேறு இல்லையென்றால் பெரிய குறையென்று கருதுவார்கள். வாழ்க்கை பொருளற்றது என்று நினைத்து வருந்துவார்கள். இந்தத் தம்பதியரும் அதே போல் வாட்டமுற்றார்கள். குழந்தையில்லா வெறுமையிலே கவலை கொண்டார்கள். தன்னுடையக் குடும்பத்தில் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.

மூத்த சகோதரரின் தம்பிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அந்த இருவரில் ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். ஒரு பிள்ளை அண்ணன் குடும்பத்துக்கும், இன்னொரு பிள்ளை தம்பி குடும்பத்துக்கும் வாரிசாகத் திகழ்வார்கள் அல்லவா? இந்த எண்ணத்தைத் தன்னுடைய தம்பியிடம் தெரிவித்து அவனது ஒப்புதலைப் பெறலாம் என்று எண்ணினார் அண்ணன்.

ஒருநாள் அண்ணன் தனது தம்பியிடமும் தம்பி மனைவியிடமும் தன்னுடைய தத்து எடுக்கின்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். தம்பி அதை விரும்புவான், ஏற்றுக்கொள்வான் என்று அண்ணன் நினைத்தார். ஆனால் நேர்மாறாக தம்பியும், தம்பி மனைவியும் தங்கள் விருப்பமின்மையைச் சொல்லாமல் சொல்லிப் போனார்கள். தம்பியின் போக்கு அண்ணனுக்குப் புரியவில்லை. எதனால் அவர்கள் மறுக்கிறார்கள் என்று அவர் குழம்பிப் போனார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு, தம்பி ஒரு நாள் திடீரென்று மரணமடைந்தான். அவருடைய மனைவியால் தன் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் போனது. வருமானம் இல்லாமல் போனதால் அவள் திண்டாடினாள். இந்த நிலைமையை அறிந்த மூத்த சகோதரர் திரும்பவும் அவளிடம் சென்று அவன் குழந்தைகளில் ஒன்றைத் தான் தத்து எடுத்துக்கொண்டு வளர்க்க விருப்பம் என்று கூறினார். அப்பொழுதும் அவள் மறுத்துவிட்டாள். அப்போதும் காரணம் தெரியவில்லை.

ஆண்டுகள் ஓடின. தம்பி, மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளர்த்து வந்தாள்.

ஆச்சரியமூட்டும் வகையில், அண்ணனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன் மனைவியை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அக்காலத்தில் ஊருக்கு ஒரு மருத்துவச்சிதான் இருப்பாள். அவளை மனைவியின் பேறு காலத்துக்கு முன்கூட்டியே சொல்லி வைத்தான். அதே நேரத்தில் தன்னுடைய வியாபார தொடர்பு காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்கு அவன் செல்லக்கூடியவன் என்பதால் பிரசவ நேரத்தில் தான் வெளியூருக்கு செல்ல நேரிட்டால் என்ன செய்வது என்று கவலையும் கொண்டான். ஆனால் அவனுக்கு ஆறுதலாக தம்பியின் மனைவி தானாக முன்வந்து, அவன் இல்லாதபோது அவளைக் கவனித்துக் கொள்வதாகக் கூறினாள்.


பேறுகாலம் வந்தது. அண்ணன் வியாபார விஷயமாக வெளியூரில் இருந்தான். இடுப்பு வலி எடுத்தவுடன், தம்பி மனைவி ஓடோடிப் போய் மருத்துவச்சியை அழைத்து வந்தாள். உண்மையில் தம்பியின் மனைவி இப்படியெல்லாம் உதவிகரமாகச் செயல்பட்டதற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. தன் கணவனின் அண்ணனுக்கு வாரிசு இல்லாமல் போகவேண்டும், அவர்களுடைய முழுச் சொத்தும் தன் கைக்கு வரவேண்டும் என்பதுதான் அவளுடைய கெட்ட எண்ணம். அதனைச் செயல்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா? பிரசவத்துக்கு உதவுவதுபோல நடித்து எப்படியாவது குழந்தையைத் தொலைத்துக்கட்டிவிடுவது என்று முடிவெடுத்தாள்.

தன் பிள்ளைகளில் ஒன்றைத் தத்துக்கொடுக்க அவள் மறுத்ததற்குக் காரணமும் அதுதான். தத்து கொடுத்த குழந்தை அவர்களோடு போய்விட்டால் சொத்தை அனுபவிக்கமுடியாதே! இப்போது அவளுடைய திட்டம், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியைக் கையில் போட்டுக்கொண்டு, குழந்தையை அப்புறப்படுத்துவது.

எதிர்பார்த்தபடியே ஒரு நாள் குழந்தை பிறந்தது. பெற்றெடுத்தவள் சற்று நேரம் மயக்கமுற்றாள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோய் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், யாரும் காணாத இடத்தில் போட்டுவிட்டுத் திரும்பி விடுகின்றனர். இரண்டு கண்கள் இதையெல்லாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. திரும்பியவுடன் ஒரு குட்டி நாயைப் பிடித்து தோலை முழுமையாக உரித்து அதைத் துணியிலே நன்றாகச் சுற்றிக்கொண்டு வந்து மயக்கமாக இருக்கும் பெண்ணுக்கு அருகில் வைத்து விடுகிறார்கள். சின்னஞ்சிறு நாய், தோல் உரித்தெடுத்தப் பின்னர் குறைமாதக் குழந்தையைப் போலத் தோன்றும் போலும்.

மயக்கம் தெளிந்து எழுந்தவள், தனது அருமைக் குழந்தையைக் காணும் ஆவலுடன் திரும்பினாள். பேரதிர்ச்சியடைந்தாள். துயரத்தில் மூழ்கி கண்ணீர் வடித்தாள். கதறி அழுதாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவனும் உடன் சேர்ந்து அழுது தீர்த்தான். பாவம், இருவரும் உடைந்து போனார்கள்.

அந்தத் துயரமான வேளையில் அவர்கள் வீட்டு வாசலிலே ஒரு பழுப்பு வண்ண நாய் வந்து நின்றது. துயரில் தலை கவிழ்ந்துக் கிடந்த கணவனுடைய அருகில் சென்று தன் முன் கால்களால் அவனைப் பற்றி இழுத்தது. அது அவனை வெளியே கூப்பிடுகிறது என்று தெரிந்து, அவனும் அதன் கூடவே சென்றான். நாய் அவனது வீட்டுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு தோப்பின் இடையில் உள்ள தன் தங்குமிடமான ஒரு மர இடுக்கின் இடையில் ஓடியது. அங்கே ஓர் அழகிய குழந்தை கை, கால்களை ஆட்டி உதைத்து அழுது கொண்டிருந்தது. அண்ணன் ஆசையுடன் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டான். அவனுக்கு உண்மைப் புலப்பட்டுவிட்டது. தன் குழந்தையைத் தன் தம்பி மனைவியும், மருத்துவச்சியும் சேர்த்து சதி செய்து போட்டு விட்டிருக்கிறார்கள். நாய்தான் அதைக் கண்டெடுத்து காப்பாற்றியிருக்கிறது.


வீடு திரும்பினான். தானும் தன் மனைவியும் எப்பொழுதாவது சிறிதளவு உணவு கொடுக்கும் அந்த நாயை நினைத்து நன்றியால் கண்கள் வழிந்தான். நாலு கால் பிராணிக்கு உள்ள நேயமும் நேர்மையும் தன் தம்பி மனைவிக்கு இல்லையே என்று கொதித்தான். ஊர் நாட்டாண்மையிடம் சென்று புகார் உரைத்தான். ஊரே இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. அவளையும் மருத்துவச்சியையும் தண்டிக்கக் குரல் கொடுத்தது. அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்கள். நன்றியுடன் குழந்தையை மீட்டெடுத்துக் கொடுத்த அந்த நாயை ஆச்சரியத்துடன் போற்றிப் புகழ்ந்தார்கள்.

குழந்தை மறுபடி கிடைக்கப் பெற்ற தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துவிட்டது. தங்கள் வீட்டில் ஓர் ஒளிவிளக்கு ஒளிரத் துவங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த இருளும் இறுக்கமும் மறைந்து விட்டது என்று மகிழ்ந்தாள். அனைத்துக்கும் காரணமான அந்த நாயை நினைத்து நினைத்து நெகிழ்ந்தாள். அந்த நாய்க்கு தான் காட்டும் நன்றியின் அடையாளமாகத் தன்னுடைய குழந்தைக்கு ஒரு தொப்பி செய்தாள். அந்தத் தொப்பியின் வடிவம் நாய்முகத் தோற்றத்தில் அமைந்திருந்தது.

அந்தத் தொப்பியை அணிந்த அந்தப் பிள்ளை எங்கு சென்றாலும் அதைப் பார்த்தவர்கள். “அதோ… நாய் மீட்டெடுத்த குழந்தை” என்று கூறுவார்கள்.

பின்னர் அக்குழந்தை அணிந்த தொப்பிக்கு ‘மவுசு’ ஏற்பட்டு விட்டது. எல்லாக் குழந்தைகளும் அதைப் போன்ற தொப்பியை அணிய ஆசைப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் இப்பொழுது “நாய்த் தொப்பியை” அணிந்து கொண்டு, மகிழ்ச்சியோடு உலா வருகின்றார்கள். நாயின் நன்றியுணர்ச்சிக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக இன்று அந்தத் தொப்பி மாறிவிட்டது.

- சீன நாட்டுப்புறக் கதை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1664.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License