பைத்தியக்காரக் கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராகப் போயிருந்தான்.
அப்போது அவன், திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான்.
அதாவது, இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்திக் கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாகக் கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒரு தைரியசாலி, அந்தக் குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்டத் தொடங்கின.
அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்தப் பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனேத் தந்து விட்டான்.
வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்தத் தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாகக் கேட்டான், "இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"
மனைவி அமைதியாகச் சொன்னாள், "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்"
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.