ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.
தவறு செய்த தனது ஊழியர்களை அந்தக் காட்டு நாய்களுக்கு இரையாக்குவார்.
ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தைச் சொன்னார், அரசருக்குச் கோபம் வந்துவிட்டது.
“இவனை நாய்களுக்குத் தூக்கி எறியுங்கள்” என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரன் கெஞ்சினான், “நான் உங்களுக்கு பத்து வருடங்களாகச் சேவை செய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்குத் தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்!”
அரசரும் ஒப்புக் கொண்டார்.
அந்தப் பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்தப் பத்து நாட்களுக்கும், தான் அந்த நாய்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.
காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக் கொண்டார்.
அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.
அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தன.
வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.
அவன் தூக்கி எறியப்பட்ட போது, அவை ஓடி வந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.
அதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
அதைப் பார்த்து திகைத்த அரசன், "என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?" என்றான்.
வேலைக்காரன் பதிலளித்தான், "நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்குச் சேவை செய்தேன், அவை என் சேவையை மறக்கவில்லை. நான் உங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்தும், என் முதல் தவற்றைக் கூட
மன்னிக்காமல் நான் உங்களுக்குச் செய்த அனைத்தையும் மறந்து என்னைத் தண்டிக்க உத்தரவிட்டீர்கள்!"
அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.
ஒருவர் செய்த சிறு தவறுக்காக, அவர் நமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து, அவரைத் தூக்கி எறிந்து விடுகின்றனர்.