தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.
"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும், எல்லோரும் சாப்பிடுவோம்” என்றார்.
அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள்.
“தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!"
சில நிமிடங்களுக்குப் பிறகு, சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டாட்டமாகக் கழித்தனர்.
அதைக் கண்டு திகைத்த தந்தை, தன் மகளிடம் திரும்பி, "வந்த மக்களை எனக்குத் தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?" என்று கேட்டார்.
அவரது மகள் சொன்னாள்.
“தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள், நம் வீட்டில் எரிவதாக நினைத்தத் தீயை அணைப்பதற்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே, நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்"
நாம் வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், நமக்கு உதவாதவர்கள், ஒருநாள் நாம் வெற்றி அடையும் போது, அந்த மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொள்ள எப்படித் தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?