மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு, பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது.
“கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில் அக்கறை உடையவன். உன் தங்கை சுமித்ராவைக் கூட, அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய்... இப்படியிருக்க... பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் அதைத் தடுத்து இருக்க முடியாதா?”
அதற்குக் கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.
“சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால், துரியோதனன் சூதாட அழைத்த போதே, என் சார்பாக மாமா சகுனி ஆடுவார்” என்று சொன்னான். ஆனால் தர்மனோ, தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். தர்மன் என் சார்பாகக் கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். தர்மன் செய்த தவறுதான், இந்த நிலைமைக்குக் காரணம்” என்றார்.