இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

வேதாந்த தரிசன உரைக்குப் பாமதியின் பெயர்

நள்ளிரவு, அந்தச் சிறிய குடிசையில் ஒரு விளக்கெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.

அந்த விளக்கொளியில் ஒரு முதியவர் ஏதோ சுவடியும் கையுமாகக் காணப்படுகிறார். அந்தச் சுவடியைச் சிறிது நேரம் ஊன்றிப் படிக்கிறார். பிறகு கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறார். பிறகு கண்களைத் திறக்கிறார். சுவடியைக் கீழே வைக்கிறார், பக்கத்தில் நிறையக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஓலைகளில் ஒன்றை எடுத்து ஏதோ எழுத ஆரம்பிக்கிறார்.

சுவடியைப் படிப்பதும், கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பிறகு ஏட்டில் ஏதோ எழுதுவதுமான வேலை தொடர்ந்து நடந்து கொண்டே செல்கிறது. விளக்கில் உள்ள எண்ணெயும் குறைந்து கொண்டே வருகிறது.

அந்த வேளையில் ஒரு புதிய பெண்மணி அங்கே தோன்றுகிறாள். அவள் விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியைத் தூண்டுகிறாள். அப்பொழுது விளக்கு சட்டென்று அணைகிறது. அது காரணமாக எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்த பண்டித சிரோமணி வாசஸ்பதி மிச்ரரின் வேலை தடைப்படுகிறது.

தவறு நேர்ந்துவிட்டதை உணர்ந்த அந்த அம்மாள், விளக்கை மீண்டும் ஏற்றிவிட்டு அப்பால் செல்ல ஆரம்பிக்கிறாள். உடனே பண்டித சிரோமணி அந்த அம்மாளைத் தடுத்து நிறுத்துகிறார்.

“அம்மா, தாங்கள் யார்?'' என்று கேட்கிறார். அந்த அம்மாள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “தாங்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கவனியுங்கள். விளக்கு அணைந்ததில் தங்கள் வேலை தடைப்பட்டுவிட்டது. தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும்” என்கிறாள்.

ஆனால் பண்டித சிரோமணி அவளை விடுவதாயில்லை. “தாங்கள் யார் என்று சொன்னால்தான் நான் மேற்கொண்டு எழுதுவேன்" என்று சொல்லி, எழுதுகோலையும் ஓலைகளையும் கீழே வைத்தார்.

“சுவாமி, நான் உங்கள் மனைவி. தயவுசெய்து என்னை நீங்கள், நீங்கள் என்று கூப்பிட்டு எனக்குப் பாவம் ஏற்படும்படி செய்யாதீர்கள்'' என்றாள்.


"நீ மனைவியா? அப்படியானால் நமக்கு எப்பொழுது திருமணம் ஆயிற்று?"

"ஐம்பது வருடங்களுக்கு முன்னர்!"

“ஐம்பது வருடங்களாக நீ என் மனைவியாக இருந்துமா நான் உன்னைத் தெரிந்து கொள்ளவில்லை!''

"திருமணத்தன்றே தாங்கள் என்னை உங்கள் வலக் கையினால் பிடித்தபோது, இடக்கையில் இந்த ஓலைச் சுவடியை வைத்துக் கொண்டிருந்தீர்கள். இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த ஓலைச் சுவடியைப் படிப்பதும், பிறகு படித்ததைப் பற்றிச் சிந்தனை செய்வதும், பிறகு அதை ஓலைகளில் எழுதுவதுமாகத்தான் இருக்கிறீர்கள்"

“இருந்தாலும் நான் உன் கணவன் என்னும் விஷயத்தை இந்த ஐம்பது வருடங்களாக நீ ஏன் எனக்கு நினைவுபடுத்தாமல் இருந்து விட்டாய்?''

"நான் எப்படி நினைவுபடுத்துவது? நீங்களோ உங்கள் வேலையைத் தவிர வேறு எதிலும் சிந்தனை செய்யாமல் இருக்கிறீர்கள்!"

“இருந்தும் ஐம்பது வருடங்களாக நான் உன்னைப் பார்க்கவே இல்லையா? பார்த்தும் இன்று கேட்டது போல, ‘நீயார்?' என்று ஏன் முன்னமே கேட்கவில்லையா?"

“வெறும் கண்களால் மட்டும் பார்த்தால் போதுமா? மனதும் அதில் ஒன்றியிருந்தால், யாரைப் பார்க்கிறோம் என்பது விளங்கும்''

"இந்த ஐம்பது வருடங்களையும் நீ எப்படித்தான் கழித்தாய்?"

“உங்களைக் கவனித்துக் கொள்வது, உங்கள் ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்வது, உங்கள் ஓலைகளைச் சீர்செய்து பக்கத்தில் வைப்பது, விளக்கு அணையாதபடி பார்த்துக் கொள்வது, இப்படிப் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றுதான் விளக்கு அணைந்து விட்டது. தாங்களும் என்னைக் கவனித்து விட்டீர்கள்"

“ஆமாம், நம் சாப்பாட்டுக்கு வழி?" “அக்கம்பக்கம் பெண்களுக்கு நான் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன். அவரவர் தங்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவுத் தானியங்கள் கொண்டு வந்து தருவார்கள். அதைக் கொண்டு தங்கள் உணவைத் தயாரிப்பேன்''

"ஐம்பது வருடங்களாகத் தாங்கள் எனக்கு இத்தனை உதவி செய்திருக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இருந்து விட்டேனே! தயவுசெய்து தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆமாம், தங்கள் பெயர் என்ன, அம்மா?"

“பாமதி!''

“தங்கள் கணவனாக இருந்தும் தங்களைப் போஷிக்காமல் விட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கூறிப் பண்டித சிரோமணி தம் மனைவியின் காலில் விழப்போனார்.

அந்த உத்தமி பாமதி அவரைத் தடுத்து நிறுத்தினாள்,


“சுவாமி! தயவுசெய்து என் காலில் விழுந்து எனக்குப் பாவம் சேரச் செய்யாதீர்கள். என்னை மறந்ததனால்தானே பலருக்குப் பயன்படும்படியான ஓர் அரிய நூலைத் தாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த நல்ல காரியத்திற்கு இடைஞ்சல் ஏற்படாமல் என்னால் தங்களுக்குப் பணிவிடை செய்ய முடிந்ததே என்று நான் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆகவே முன்னைப் போலத் தாங்கள் என்னை மறந்து உங்கள் வேலையில் ஈடுபடுங்கள்'' என்றாள் பாமதி.

பாமதியின் நல்ல குணத்தைக் கண்ட பண்டித சிரோமணி ஆச்சரியப்பட்டார்.

“பாமதி! எத்தனையோ வருட தவப்பயனாக வியாசர் இயற்றிய வேதாந்த தரிசனம் என்னும் நூலுக்கு உரை எழுதத்தான் நான் என் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து விட்டேன். ஆனால் நீ மட்டும் இத்தனை சிரத்தையுடன் என்னைக் கவனித்திராவிட்டால் இந்த நூல் முற்றுப் பெற்றிராது. ஆகவே இந்த நூலுக்கு, பாமதி என்னும் உன் பெயரைத்தான் வைக்கப் போகிறேன்'' என்றார். ஒருமுனைப் பாட்டின் சிகரமான பண்டித சிரோமணி வாசஸ்பதிமிச்ரர் அவர்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1974.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License