இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

எப்போது அறிவுரை தருகிறீர்கள்...?

ஊருக்கே பெரிய மாளிகை. அதில் எழிலோவியம் வாசவதத்தை வாழ்ந்து வந்தாள். அவளுடைய அழகுக்கு வசப்பட்ட உள்ளங்கள் ஏராளம்!

இளவேனிற் காலத்தின் காலை நேரம். ஒரு பௌத்தத் துறவி, வாசவதத்தையின் மாளிகையின் வாயிலில் பிச்சையின் பொருட்டு வந்து நின்றார். திடீரென்று துறவியின் மீது வாசவதத்தையின் பார்வை சென்றது. ஒருமுறை பார்த்தாள். மறுமுறை பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

வந்த துறவி உபகுப்தர் ஓர் ஆண்டிதான். ஆனால், மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையான அருள் விஷயத்தில் நிகரற்றவர். அவருக்கு என்று சொந்த ஊர், வீடு, வாசல் எதுவுமே கிடையாதுதான். உலகிலேயே பெரிய பெரிய ராஜ்யங்களைவிடவும், பெரியதாகவும் அளவிட இயலாததாகவும் இருப்பது மனம்தான். அப்படிப்பட்ட மனதின் மீதே முழு அளவில் வெற்றி கண்டவர் உபகுப்தர். புலன்கள் அனைத்துமே அவருக்கு அடிமை.

அத்தகைய துவராடை அணிந்த துறவியின் முன், பலரைத் தோற்கடித்த பேரழகி வாசவதத்தை தோற்றுப்போனாள். உபகுப்தர் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் தன் இதயத்தையே அர்ப்பணிக்க முன்வந்தாள்; கெஞ்சினாள்; பிரார்த்தித்தாள்.

சாந்தமூர்த்தியாகிய பிக்ஷு, ''எனக்கு இப்போது நேரமில்லை'' என்றார்.

''பின் எப்போது வருவீர்கள்?'' என்று ஆவல் ததும்பக் கேட்டாள் வாசவதத்தை.

பிட்சுவோ சிறிதும் கவலையின்றி இயல்பான குரலில், "சில நாட்கள் செல்லட்டும். பிறகு வருகிறேன்'' என்று கூறிவிட்டு, ஒரு வினாடியும் தாமதிக்காமல் பௌத்த விஹாரத்தை நோக்கி விரைந்தார்.

துறவியின் பதிலையும் செயலையும் வாசவதத்தை எதிர்பார்க்கவில்லை. அவள் அடிபட்ட பெண்புலியாகச் சீறினாள்: ''கேவலம் ஒரு பிட்சுவின் எழிலை அலட்சியப்படுத்துவதா! பார்த்துவிடுகிறேன்!''

உபகுப்தர் சொன்ன அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருந்தாள்.


அற்ப ஆயுளை உடைய சந்தியா காலம் விரைந்தது. சரத்காலச் சந்திரன் மிகுந்த சோபையுடன் விண்ணில் தோன்றி நிலவைப் பொழியத் தொடங்கினான். அடர்ந்த காட்டிலுள்ள மரங்களின் கால்களைக் கழுவியவண்ணம் கங்கை ஓடிக் கொண்டிருந்தது.

அந்தக் காட்டின் வழியாக உபகுப்தர், தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு மடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஒரு சிங்கம் அவர் மீது பாயத் தயாராயிற்று. அதற்குத் தெரியுமா புத்தரின் கொள்கைகளும் உபதேசங்களும்? எனவே அது உபகுப்தரை நோக்கிப் பாய்ந்தது. உபகுப்தர் தம் தலையைத் தாழ்த்திக்கொண்டு தயாராக இருந்தார்.

அருகில் ஒரு சிறிதும் ஒளி புகமுடியாத அடர்ந்த புதரிலே வேடன் ஒருவன் ஒளிந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். சிங்கம் பாயத் துவங்கியவுடன், எங்கிருந்தோ வந்த அம்பு சிங்கத்தின் மீது பாய்ந்து அதைக் கீழே வீழ்த்தியது! மிகவும் பெருமையுடன் வேடன் வெளியே வந்தான்.

உபகுப்தர் வேடனை நோக்கி, "அப்பா! நிரபராதியான சிங்கம் உனக்கு என்ன தீங்கு செய்தது? அது என்னைத்தானே கொல்ல வந்தது?'' என்று அமைதியாகக் கேட்டார். வேடன் துணுக்குற்றான். உபகுப்தரின் கருணை விழிகள் அவனுக்கு எத்தனை எத்தனையோ விஷயங்களை எடுத்துக் கூறின. வேடன், தன்னுடைய வில்லையும் அம்பறாத்துணியையும் அம்புகளையும் கங்கையிலே வீசிவிட்டு, 'இதுவே என்னால் செய்யப்பட்ட கடைசிக் கொலை' என்று சொல்லி அன்பின் வழிநாடிப் புறப்பட்டான்.

உபகுப்தர் மிகவும் சிரமத்துடன் சிங்கத்தைக் கங்கைக்கு அருகில் இழுத்து வந்தார். அம்பைப் பிடுங்கிக் காயங்களைக் கழுவினார். சிங்கம் பிழைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், உபகுப்தர் சிங்கத்தைக் காப்பாற்றும் முயற்சியில் மனம் தோய்ந்து ஈடுபட்டிருந்தார்.

அதேசமயம் நிலவின் ஒளியிலே கங்கையில் ஒரு படகு மிதந்து வந்தது. அதிலிருந்து வந்த இனிய கீதம் மிகவும் ரம்மியமாக இருந்தது. திடீரென்று பாட்டு நின்றது. காரணம், படகில் வீற்றிருந்த வாசவதத்தை உபகுப்தரின் செய்கையைக் கண்டதுதான். உடனே, ''ஏ பிட்சுவே! என்ன காரியம் செய்கிறாய்? அந்தச் சிங்கம் உன்னையே கொன்றுவிடுமே!'' என்று சொல்லி அவள் கூச்சலிட்டாள்.

உடனே உபகுப்தர் அவளை நோக்கி, “பெண்ணே , நீ தவறாகச் சொல்கிறாய். வெளியே அழகிய உடல் கொண்டு பிறரைக் கெடுக்கும் உள்ளங்கொண்ட நயவஞ்சகர்களை விட இது கொடியது அல்லவே!'' என்றார்.

வாசவதத்தைக்கு எதுவுமே விளங்கவில்லை. அவரைக் கண்டதும் ஆசைதான் அதிகமாகியது. ''பிட்சு, உம்மையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனே! என்னை மறந்து விட்டீரா!'' என்று மயக்கத்துடன் கேட்டாள். உபகுப்தர், ''மறக்கவில்லை. அவசியம் சில நாட்கள் சென்ற பிறகு வருகிறேன்'' என்றார். அவளோ அன்றே, அந்த வினாடியே வர வேண்டும் என்று அடம்பிடிக்கத் தொடங்கினாள்,

உபகுப்தர் அவளைத் தேற்றும் வகையில், ''இந்தப் பிறவியிலேயே வருகிறேன்'' என்று சொன்னார். கடைசியில், ''இந்த வருடம் முடிவதற்குள்ளாகவே வந்துவிட வேண்டும்'' என்று. வேண்டிக்கொண்டு வாசவதத்தை தன் வழியே சென்றாள்.

உபகுப்தர் மீண்டும் சிங்கத்திற்கு மருத்துவம் செய்வதில் முனைந்தார்.


வாசவதத்தை நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். நாட்கள் நகர்ந்தன. பருவங்கள் மாறின. ஆனால் உபகுப்தர் மட்டும் வரவேயில்லை. வருடம் முடிவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே மீதமிருந்தன.

அன்றைய தினம் வாசவதத்தையின் வீடு மிகவும் களை கட்டியிருந்தது. அன்று அவளுடைய வீட்டிலே ஒரு லட்சாதிபதிக்குத் தனி விருந்து. நடு இரவு நேரம். வாசவதத்தை, வேலைக்காரர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள். கட்டிலில் மது மயக்கத்தில் மயங்கி அசைவற்றுக் கிடந்தான் லட்சாதிபதி. சற்றும் தயங்காமல் வாசவதத்தை தன்னுடைய கூரிய கத்தியால் இலகுவாக அவனை ஒரே குத்தில் கொன்று விட்டாள்! ஆம் கொலை தான். அவள் ஒரு சௌந்தரிய கொலைக்காரி! அந்த லட்சாதிபதியோ, 'அடி, மாயப் பிசாசே!'' என்று அலறியபடி தன் உலக வாழ்க்கையை அந்த வினாடியே முடித்துக் கொண்டான்.

அதேசமயம் வாயிலில் 'வாசவதத்தா!', என்றழைக்கும் குரல் கேட்டது. அவள் ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே உபகுப்தர் நிற்பதைக் கண்டு துணுக்குற்றாள். ''சுவாமி! வந்துவிட்டீர்களா!'' என்றாள். "இல்லை, விரைவில் வருவேன்'' என்றார் உபகுப்தர். ''பிறகு ஏன் இந்த அகால வேளையில் வந்தீர்கள்'' என்றாள் வாசவதத்தை. ''ஒன்றுமில்லை பெண்ணே! நான் புத்த விஹாரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். உன் வீட்டைப் பார்த்ததும் நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா? அல்லது தூங்கிக் கொண்டிருக்கிறாயா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அழைத்தேன்'' என்றார்.

உடனே வாசவதத்தை, தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நினைவிருக்கிறதா என்று ஆவலோடு கேட்டாள். உபகுப்தர், ''புத்தரின் சீடர்கள் பொய் சொல்வதில்லை. இன்னும் பதினைந்து நாட்கள் மீதியிருக்கின்றனவே, வந்து விடுவேன்'' என்று சொல்லிவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட்டார்.

வாசவதத்தை ஒளிந்து கொண்டாள்.

அவள் பணத்திற்காக லட்சாதிபதியைக் கொலை செய்தாள். குட்டு வெளிப்பட்டது. வாசவதத்தை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டாள். அவளுக்கு உதவியாக அவளது செல்வமோ, அழகோ, வழக்கமாக வரும் காதலர்களோ வரவில்லை.

''அவளுக்குத் தூக்குத் தண்டனையே தரப்பட வேண்டும். ஆனால், அதுவே அவளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகிவிடுமே! ஆகவே, அந்த வாய்ப்பைத் தந்து அவளைத் தப்பவிட்டுவிடக் கூடாது. அவளுடைய அழகு அழிக்கப்பட வேண்டும்'' என்று விசாரணையின்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

வாசவதத்தை, ''ஒரே ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்'' என்று தன்னால் இயன்ற மட்டும் மன்றாடி வேண்டினாள். தன் ஆருயிர் உபகுப்தரைப் பார்த்த பிறகு, எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால், அவளுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க ஒரே ஒருவர் கூட முன்வரவில்லை.

பிறரை வசீகரித்த வாசவதத்தையின் விழிகள் பிடுங்கப்பட்டன. காதுகளையும் மூக்கையும் அறுத்தெறிந்தார்கள். அவளுடைய இரண்டு கைகளும் கூட வெட்டப்பட்டு விட்டன. அவளுடைய செல்வம் முழுவதும் அபகரிக்கப்பட்டது. அந்த அவல நிலையில் வாசவதத்தை ஓர் அனாதையாக நடுத்தெருவிலே வீசப்பட்டாள். அதோடு மட்டும் இல்லாமல், வருவோர் போவோரிடமும் அவளுடைய பயங்கரக் கதையை வேறு விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு காலமும், அவளையும் அவளது செல்வத்தையும் சுற்றிச் சுற்றி வந்தவர்கள் அத்தனை பேருமே, தங்களை ‘யோக்கியர்களாக' பாவித்துக்கொண்டு, இப்போது வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு அவள் இருக்கும் இடத்தைவிட்டே விலகிச் சென்றார்கள்.


இத்தகைய அவல வேளையில் உபகுப்தர் அவளருகே வந்தார். அவளுடைய தலையில் தன் கையை வைத்தார்.

"யார்?''

''நான்தான் உபகுப்தன்.''

வெகுண்டாள் வாசவதத்தை. ''ஏன் வந்தீர்? நீங்கள் ஒருவர் மட்டும்தான் என்னைப் பரிகசிக்காத ஒரே ஆள் என்று நினைத்தேன், நீங்களும் இப்போது வந்து விட்டீரா?'' என்று எரிந்து விழுந்தாள். ''போ! திரும்பிப் போ! உன்னை யார் இங்கே அழைத்தது!'' என்று பொரிந்து கொட்டிக் கூச்சலிட்டாள்.

உபகுப்தர் தமக்கே உரிய இயல்பான குரலில் அமைதியாகப் பேசினார். ''பெண்ணே! என்னை ஏன் விரட்டுகிறாய்? நீ அழைத்தபடியே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கின்றன. இதுதான் சரியான சமயம்.''

வாசவதத்தை, 'பிட்சுவே! நான் எல்லா நலன்களும் பெற்று எழிலரசியாய் விளங்கும் போது உம்மை அழைத்தேனே தவிர, இப்போது அழைக்கவில்லையே!'' என்றாள்.

ஆனால் தயாளமூர்த்தி உபகுப்தர், கருணை ததும்ப, இந்த உலக வாழ்க்கையின் சாரமற்றத் தன்மையை விளக்கிப் பரம்பொருளின் மீது மனதைச் செலுத்துவது ஒன்றே ஒன்று மட்டும்தான் மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை விளக்கினார்.

வாசவதத்தையோ, ''இந்த அந்திமக் காலத்தில், என்னால் எதுவுமே செய்ய இயலாத சமயத்தில் வந்து அறிவுரை தருகிறீர்களே! அப்போதே வந்திருந்தால் நான் திருந்தி இருப்பேன் அல்லவா?'' என்று நெஞ்சு வெடிக்கக் கூறினாள்.

உபகுப்தர், ''அம்மா! வாழ்க்கையைப் பற்றிய அப்படிப்பட்ட பெரிய உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நேரம் இப்போதுதான் உனக்கு வந்திருக்கிறது. உன்னை போதிசத்துலரிடம் அழைத்துப் போகிறேன்'' என்று கனிவுடன் சொன்னார். அவளை போதிசத்துவரிடம் அழைத்தும் சென்றார்.

புத்தபிரானின் கருணையால், வாசவதத்தை பாவ புண்ணியங்களில் இருந்தும் விடுபடும் பிராயச்சித்தம் என்னும் புனித ஆற்றில் மூழ்கி எழுந்தாள். துறவறம் மேற்கொண்டாள். எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் பரம்பொருளின் திருவடியைத் தொழுதபடியே மெய்யன்பைப் பெற்றாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1977.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License