இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

துறவியின் பிரார்த்தனை

அயோத்தி மாநகரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம் சரயு நதியைக் கடந்து வேறு ஓர் இடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அது மழைக் காலம். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்து மூட்டம் கண்டிருந்தது. மழை எந்தச் சமயத்திலும் வந்துவிடும் போல இருந்தது.

ஆகவே துறவி வெகு வேகமாக சரயு நதிக்கரையை நோக்கி நடந்தார். நதியில், அண்மையில் பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தது.

துறவி ஆற்றங்கரைக்கு வந்த சமயம், அங்கே ஒரே ஒரு படகு இருந்ததைக் கண்டார். அதுவும் புறப்படும் தறுவாயில் இருந்தது. படகில், பண பலமும் ஆணவமும் நிறைந்த மக்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்கள் துறவியைக் கண்டதும், அவரைத் தங்களுடன் படகில் பிரயாணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதோடு, துறவியைப் பற்றியும் அவரது உடையைப் பற்றியும் கேலியாகப் பேசிச் சிரித்தனர்,

துறவியை நோக்கிப் படகில் இருந்தவர்கள் அனைவரும், 'இங்கே படகில் இடமே இல்லை. நாங்களே நெருக்கமாகத்தான் உட்கார்ந்திருக்கிறோம். நீ வேண்டுமானால் காத்திருந்து அடுத்த படகில் வா'' என்று ஒன்றாகச் சேர்ந்து கூவினர். அவர்களுக்கு, துறவியைத் தங்களுடன் அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. ஆனால், அதைத் துறவியிடம் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கூறினர்.

அப்போது மாலை சாய்ந்து இருளும் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தப் படகைத் தவற விட்டுவிட்டால், அடுத்த படகு கிடைக்குமா என்பதே சந்தேகம். ஏனென்றால், காற்றும் வெள்ளமும் பலமாக இருக்கும் அந்த இரவு வேளையில், படகுக்காரர்கள் யாரும் படகை ஓட்ட முன்வர மாட்டார்கள்.

இரவில் வேறு படகு கிடைப்பதற்கு வழியில்லை என்பதைத் துறவி உணர்ந்தார். ஆதலால் அவர், அதே படகில் ஏறி ஆற்றைக் கடக்க நினைத்தார்.

அவர் படகுக்காரனிடம், தன்னையும் படகில் ஏற்றிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். படகுக்காரனுக்கும் நிலைமை புரிந்தது.


அவன் சில வினாடிகள் யோசித்துவிட்டு, "நீங்கள் படகில் ஏறிக்கொள்ளுங்கள்'' என்று சொன்னான். பிறகு அவன், படகின் ஒரு மூலையில் இடத்தை ஒதுக்கித் துறவி உட்கார வழி செய்தான்.

படகில் இருந்தவர்கள், துறவி படகில் ஏறாமல் இருப்பதற்காக ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தடுத்தும் பார்த்தனர். ஆனால், தெய்வச் செயலாக அவர்களுடைய முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. துறவி மக்களுடைய ஆட்சேபணைகளைப் பொருட்படுத்தாதவராகப் படகில் சென்று உட்கார்ந்தார். அவருடைய உதடுகள் பகவானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தன.

துறவிக்குப் படகிலே இடம் கொடுக்கக்கூடாது என்று நினைத்த மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். அவர் படகில் உட்கார்ந்ததை வெறுக்கும் வகையில் அவர்களுடைய முகங்கள் மிகவும் 'அழகாக' இருந்தன. தாங்கள் இவ்வளவு சொல்லியும் 'இந்த ஆண்டிப் பரதேசி படகில் ஏறிவிட்டானே!' என்று அவர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதோடு, ''சரி, சரி. நாங்கள் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் நீ படகிலே இடம் பிடித்துக் கொண்டாயா? போகட்டும். உனக்குப் புத்தி வரும் வகையில் சரியான பாடம் கற்பிக்கிறோம்'' என்று மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டனர்.

துறவி படகின் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அப்போதும் அவருக்குத் துன்பம் தரும் வகையில் படகில் இருந்தவர்கள் ஏதேதோ சொல்லவும் செய்யவும் செய்தனர்.

துறவிக்கு அந்த மக்கள் மீது எந்தவித வெறுப்பும் இல்லை. மற்றவர்களைக் கோபிப்பது, வெறுப்பது என்பதெல்லாம் படகில் இருந்த துறவிக்குத் தெரியவே தெரியாத விஷயங்கள். மனத்தால் கூட மற்றவர்களுக்குத் தீமை நினைப்பது என்பது அவருடைய அகராதியிலேயே கிடையாது. அவர், மக்கள் தம்மை வாயில் வந்தபடியெல்லாம் தூற்றியதை உணர்ந்தவராகவே தெரியவில்லை.

படகில் உட்கார்ந்த துறவி, தம் இரத்தத்திலேயே ஊறிய தமது இயல்பின்படி கண்களை மூடி ஆண்டவனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர், புறவுலக நினைவை இழந்து ஆழ்ந்த தியானத்தில் ஆமிழ்ந்து போனார். ஆகவே, மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசும் கேலிப் பேச்சுகளைக் கவனிக்க இயலாத நிலையில் இருந்தார்.

நடு ஆற்றிலே படகு போய்க் கொண்டிருந்தது. கடுமையாகக் காற்றும் வீசியது. பிரயாணிகள் துறவியைக் கேலி செய்யும் 'கைங்கர்ய'த்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். வெளியுலக நினைவு இல்லாத துறவியோ அமைதியாக இருந்தார்.


துறவியின் மௌனம் படகில் இருந்தவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.

சிலர் ஆற்று நீரைக் கைகளால் வாரி துறவியின் முகத்தில் அடித்தனர். துறவி முழுக்க முழுக்க நனைந்து விட்டார். அப்போதும் கூட, தியானத்தில் இருந்த அவரிடம் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. துறவி கண்களையும் திறவாமலேயே பகவானின் நினைவில் தோய்ந்திருந்தார். இதைக் கண்டதும் மக்களின் கோபம் மேலும் அதிகமாகியது. ஒரு போக்கிரி ஆத்திரத்துடன் துறவியின் கழுத்தில் ஓங்கி அடித்தான். அதைத் தொடர்ந்து பலரும் துறவியை அடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் உடல் நினைவு அறவே இல்லாததால், துறவி மற்றவர்கள் தன்னைத் துன்புறுத்துவதை உணராமல் இருந்தார்.

''தண்ணீரை மேலே இறைத்தாலும் கண்களைத் திறக்கவில்லை. அடித்தாலும் அசையவில்லை. இனிமேல் இந்தத் துறவியை ஆற்றிலே பிடித்துத் தள்ளி மூழ்கச் செய்ய வேண்டியதுதான்'' என்று படகில் இருந்த மக்கள் முடிவு செய்தார்கள். அந்த முடிவுக்கு வந்த உடன் அனைவருமாகச் சேர்ந்து, துறவியை அசைத்து ஆற்றிலே தள்ள முயன்றனர்.

ஆனால், தனது அன்பிற்குரிய பக்தனுக்கு மக்கள் விளைவித்த துன்பங்களை, அதற்கு மேலும் ஆண்டவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. துறவியை மக்கள் ஆற்றிலே தள்ள இருந்த சமயத்தில், வானத்தில் அசரீரியாக ஆண்டவனின் குரல் முழங்கியது. ''ஓ சாதுவே! நீங்கள் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். நீங்கள் அனுமதித்தால் இந்தக் கொடியவர்களை இந்த வினாடியே ஆற்றில் மூழ்கிச் சிதறச் செய்கிறேன்''

படகில் இருந்தவர்கள் அத்தனை பேருமே இடியைப் போல முழங்கிய அசரீரியின் குரலைக் கேட்டு நடுங்க ஆரம்பித்தார்கள். பயத்தால் அவர்களுடைய இரத்தம் உறைந்தது போல ஆகிவிட்டது. முகங்களெல்லாம் சிவந்து விட்டன. துறவியை அதிக அளவில் துன்புறுத்தியவர்கள் பரிதாபமாக விழித்தார்கள். சிலர் பயத்தால் ஆடாமல் அசையாமல் கற்சிலையைப் போலக் கிடந்தார்கள். சிலருக்கு அடி வயிற்றைக் கலக்கியது. சிலரால் பயம் காரணமாகச் சரியாக மூச்சுக்கூட விடமுடியவில்லை.


அசரீரியின் குரலைக் கேட்டதால், அந்தச் சமயத்தில் துறவிக்குப் புறவுலக நினைவு திரும்பியது. தியானம் கலைந்த துறவிக்குப் படகில் இருந்தவர்களின் நிலைமை புரிந்தது. மறு வினாடியே அவர் ஆண்டவனை நினைத்துக் கைகளைக் கூப்பி வணங்கியபடி, ''எனது அன்புக்குகந்த கருணை தெய்வமே! இந்த மக்களும் உன்னுடைய குழந்தைகளே, அல்லவா? நீங்களே இவர்களை மன்னித்து அருள் புரியவில்லையானால், வேறு யார் அவ்விதம் செய்யப் போகிறார்கள்? அவர்கள், தாங்கள் யார் என்பதையும் இன்னதுதான் செய்கிறோம் என்பதையும் அறியாமல் இருக்கிறார்கள். என் தெய்வமே! தங்களுக்கு என்மீதுள்ள அன்பின் பெயரால், எனது பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து உங்களுடைய இந்தக் குழந்தைகளை மன்னித்து திருவருள் புரிய வேண்டுகிறேன். அவர்களுடைய பயத்தைப் போக்கி அருள்வீராக! அவர்களுக்கு அமைதி தருவீராக! தங்களின் அன்புச் செல்வங்களாக இவர்கள் அனைவரையும் கருணைகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தங்களின் மேல் மனப்பூர்வமாக பக்தி உண்டாகச் செய்யுங்கள்'' என்று உள்ளம் நெகிழப் பிரார்த்தித்தார்.

ஆண்டவன் துறவியின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார். துன்பம் விளைவித்தவர்கள் சான்றோர்களாகத் திருந்தப் பெற்று தலைசிறந்த பக்தர்களானார்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1978.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License