இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

புதையல் கிடைக்குமா?

அரண்மனை பூமிக்குள் புதைந்து விட்டதாகவும், அரண்மனையிலே நிறையத் தங்கக் காசுகளும் மிக விலையுயர்ந்த பொருள்களும் இருந்ததாகவும் செய்தி ஒன்று உலவி வந்தது. பின்னர் அந்த இடம் மேடாகப் போய்விட்டதாகையால், அந்த இடத்திற்கு 'அரண்மனை மேடு' என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காலியிடம் ஆகவும், ஒருவரும் பயன்படுத்தாது பாழடைந்து விட்டதாகவும், பலரும் சொல்லுவர்.

அதற்குச் சிறிது தூரத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது. அந்த அம்மன் கோயிலில் பெரியோர்கள் தங்குவது வழக்கம்.

பக்கத்தில் உள்ள ஓர் ஊரிலே ஓர் ஏழையான மனிதர் அரண்மனை மேட்டைப் பற்றிய வதந்தியைக் கேட்டறிந்தவர். அந்த மேட்டில் கீழேயுள்ள தங்கத்தைப் பெற்றால் தமது வறுமை நீங்கும் என்ற ஆசை அவர்க்கு எழுந்தது.

அந்தத் தங்கத்தைப் பெறத் தெய்வத்தின் கிருபையாலன்றி வேறு வழியிற் பெற இயலாது என்று சிந்தித்து, பக்கத்திலுள்ள அம்மன் கோயில் தெய்வத்தைத் தினமும் வழிபட்டு வந்தார். அங்கே தங்குவோரில் உண்மையான சாது ஒருவர் தமக்குத் தேவி மந்திரம் உபதேசித்து ஜபம் செய்யும் வகையையும் கூறுவாராயின், தாம் அதை ஜெபித்து அங்குள்ள அம்மனின் அருளைப் பெற்றால், தங்கத்தைப் பெறலாம் என்று பலநாள் பகற்கனவு கண்டு கொண்டிருந்தார்.

நெஞ்சுருகிப் பண்ணும் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார் என்பது உண்மையன்றோ? ஒரு நாள் சாது ஒருவர் அந்த அடியாரைப் பார்த்து, 'உனக்கு அம்பாள் மந்திரம் சொல்லுவேன், நீ ஒழுங்காக ஜபிப்பாயா?' என்று கேட்டார்.

அடியார் மனமகிழ்ந்து, சாதுவிடமிருந்து மந்திரோபதேசம் பெற்றார். காலையும் மாலையும் அக்கோயிலுக்கு வந்து, அது ஏகாந்தமான இடமாதலின், மணிக்கணக்காக ஜெபம் செய்யத் தொடங்கினார். மாதக் கணக்காக, ஆண்டுக் கணக்காக மந்திரத்தை ஜெபித்து வந்தார்.


ஒரு நாள் அந்த அடியாரது கனவில் அம்பாள் தோன்றி, “உனது முயற்சியைக் கண்டு மகிழ்ந்தேன்; நீ வரும் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கோயிலுக்குப் பக்கத்துள்ள மரத்தடியில் நின்று கொண்டிரு. நான் ஒரு சிறுமி வடிவத்தில் தோன்றிப் புதையலைக் காட்டி, அதை எடுக்க உதவி செய்வேன்" என்று கூறினாள். அக்கனவு நனவு போலிருந்தது; கூறியபடியே செய்வதாக உறுதி பூண்டார்.

குறிப்பிட்ட நாளன்று இரவில் ஏழு மணிக்கே அம்மரத்தடியில் அமர்ந்து, விழித்துக் கொண்டே ஜெபித்தும், பிரார்த்தித்தும் வந்தார். எட்டு மணிக்கு ஒரு சிறுமி மரத்தடிக்கு வந்து, அடியாரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாள்.

அச்சிறுமியைத் தொடர்ந்து அடியார் செல்ல, சிறுமி அரண்மனை மேட்டின் மேல் ஓரிடத்தில் நின்றாள். அடியார் வந்ததும் சிறுமி ஒரு கதவைத் திறக்க, பூமிக்குள் இருக்கும் ஓரறையும் அதற்குச் செல்ல ஓர் ஏணியும், அறைக்குள் பிரகாசமாக எரியும் விளக்கும், தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பெரிய பாத்திரமும் தென்பட்டன. சிறுமி அடியாரை ஏணி வழியாக இறங்கி, வேண்டிய மட்டும் தங்கக் காசுகளை எடுத்து அங்கிருந்த ஒரு சிறு பெட்டியில் வைத்து அதைத் தூக்கிக் கொண்டு ஏணியின் மீது ஏறி வெளியே வரும்படி சொன்னாள்.

உள்ளம் பூரித்த அடியார் அப்பெட்டி நிறையக் காசுகளை வைத்து; அதைத் தூக்கிக் கொண்டு மேலேற முயன்றார். மிகக் கனமாயிருப்பதாக அடியார் கூற, சில காசுகளைக் கீழே எறிந்து விட்டு ஒவ்வொரு படியாக மெல்ல ஏறி வரச் சொன்னாள். ஒரு படி ஏறினதும், "அம்மா, சுமை கனமாயிருக்கிறதே, தூக்க முடியவில்லையே" என்று அடியார் முறையிட, “இன்னும் சில காசுகளை எறிந்து விட்டு, தூக்கக் கூடியதை மட்டும் மேலே எடுத்து வா" என்றாள் சிறுமி.

சில காசுகளை எறிந்துவிட்டு மீதியைத் தூக்கிக் கொண்டு மேலேற, கனம் பின்னும் அதிகமாயிருக்க, ஒவ்வோர் படியிலும் சில காசுகளை எறிந்து விட்டு, மேலேறினார். இரண்டே படிகள் மட்டும் ஏறவேண்டியிருந்தன; அப்போது இரண்டே காசுகள் இருந்தன.

ஒரு படி ஏறியதும் ஒரு காசை எறிந்தார்; அப்போதும் கனம் அதிகமாயிருந்தது. கடைசிப் படியில் நின்றபோது ஒரு காசு மட்டும் இருந்தது, அதுவும் தூக்க இயலாத கனமுடையதாகத் தோன்றிற்று.


அதையும் பெட்டியோடு கீழே எறிந்து விட்டு, அறைக்குவெளியே வந்தார் அடியார். கதவு மூடிக்கொண்டது.

அடியார் முன்னே சிறுமி மேட்டில் நின்றுகொண்டு, அவரது துயரம் நிரம்பிய முகத்தை உற்று நோக்கி, "பக்தனே, உன் மீது கொண்ட அன்புக்கும், உன் தவத்திற்கும் வசப்பட்டும், என்னால் இயன்றதை உனக்குச் செய்தேன். உனக்குப் பெரும்பொருளை அனுபவிக்கும் விதி இல்லை, என் செய்வது! வருந்தாதே, உனக்கு உண்டு உடுத்து உயிர் வாழ்தற்கு வேண்டிய அளவு கிடைக்கும். இனி மறு முறை என்னைக் குறித்துத் தவஞ் செய்யாதே'' என்று தேற்றி விட்டு, அவ்விடத்திலேயே சிறுமி மறைந்தாள்.

அடியாரும் ஒருவாறு மனந்தேறி இல்லம் மீண்டு வாழ்ந்தார். தேவியின் அனுக்கிரகத்தால் அவர்க்கு ஆயுள் முடியும் வரை, உணவுக்கோ உடைக்கோ தட்டு ஏற்படாதவாறு காலம் கழியலாயிற்று.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1992.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License