இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

ஐம்புலன்களில் உயர்ந்தது எது?

உடலில் ஜீவன் மிகவும் கலக்கமடைந்தது. காரணம், ஐம்புலன்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

'யார் சிறந்தவன்?' என்ற பிரச்னை.

தங்களுக்கிடையில் போட்டி| "நான் தான் சிறந்தவன்” என்று புலன்கள் ஒவ்வொன்றும் கூச்சலிட ஆரம்பித்தன.

"நானே சிறந்தவன். நான் இல்லாவிட்டால் எதையுமே பார்க்க முடியாது" என்று கண் ஆணவத்துடன் கூறியது.

"செவிப்புலன் இல்லாவிட்டால் உலகில் எதைக் கேட்பாய்? எதை ரசிப்பாய்? நானே சிறந்தவன்" இப்படி செவி சீற்றமுடன் பேசியது.

"மலர் வாசனை, உணவின் வாசனை, நாற்றம் ஆகியவற்றை இனம் காண்பது யார்? நான்தானே... நானே சிறந்தவன்" என்று கூறி மூக்கு முழங்கியது.

"சுவையை அறிவது நாக்கே... வாய்தானே உணவை மென்று சுவைத்து உண்ண உதவுகிறது? வாயே புலன்களில் சிறந்தவன்” இப்படி வாதிட்டது வாய்.

“பேசுவது நானேயன்றோ ..." என்பது வாயின் வீராப்பாகவும் இருந்தது.

“உஷ்ணம், குளிர், வலி, உணர்வு, இன்பம், துன்பம் இவற்றை இனம் கண்டு உணர்த்துவது... தொடுபுலன்... நானே அல்லவா? என்னைவிடச் சிறந்த புலன் எதுவும் இல்லை..." என்று கூச்சலிட்டது தோல்.

இப்படியாக புலன்களிடையில் போட்டிக் கூச்சல்.

ஜீவனால் இந்தப் புலன்களின் தன்முனைப்புக் குரலைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

புலன்களின் போட்டி, தர்க்கம்... ஆர்ப்பாட்டம்... உச்சக்கட்டத்தை எட்டியது.

இதற்குத் தீர்வுதான் என்ன?

யார் சிறந்தவன் என்ற கூற வல்லவர் யார்?

பிரம்மதேவரிடம் சென்று தங்கள் விவாதத்தைக் கூறின.

“எங்களில் யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்" என்று கேட்டன.


"உங்களில் யார் உடலை விட்டு நீங்குவதால் அதிகமாகத் துன்பம் ஏற்படுகிறதோ அவனே சிறந்தவன்" என்றார் அவர்.

அவர் சொன்னதைச் சோதித்துப் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் ஐம்புலன்கள் திரும்பின.

முதலில் வாக்கு, உடலை விட்டுப் பிரிந்து கொஞ்ச காலம் சென்றது. மீண்டும் திரும்பி வந்தது.

"உடலே..... உடலே..... நான் இல்லாமல் நீ எப்படி வாழ்ந்தாய்? வாக்கு இல்லாமல் உன்னால் வாழ முடிந்ததா?"

"ஊமையாகப் பிறந்தவர்களைப் போல கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, மூக்கால் சுவாசித்து, சிந்தித்து வாழ்ந்தேன். வாக்கு இல்லாவிட்டால் என்ன?" என்று உடல் கூறிய பதிலைக் கேட்டு வாய் மௌனம் சாதிக்க வேண்டியதாயிற்று.

அடுத்து, கண் புலன் உடலை விட்டுப் பிரிந்து சென்றது.

குருடர் வாழவில்லையா என்ன? செவிப்புலன் இருக்க, வாயால் பேசி, மற்ற புலன்கள் செயல்பட வாழ்ந்தது உடல்.

உடல் விட்டு அகன்ற செவிப்புலன், சிறிது காலத்திற்குப் பிறகு திரும்பியது.

"செவிப்புலன் இல்லாத வாழ்க்கை, அப்படி ஒன்றும் துன்பமாக இல்லை... செவிடராக வாழ முடியாதா என்ன?"

மூக்கு முகர் உணர்வு நீங்கிய போது,

“நுகர்ச்சி இல்லாதது ஒரு பெரிய குறையா என்ன? குழந்தை போல வாழ முடியுமே ” என்றது உடல்.

தொடு உணர்வு..... ஸ்பரிச உணர்வு...... நீங்கிய போது,

"மரக்கட்டையைப் போல வாழ முடியும். இதனால் துன்பமில்லை” என்று உடல் கூறியது.

கடைசியில் ஜீவன் வெளியேறத் தொடங்கியது. பிராணன் உடலை விட்டுப் பிரியத் தொடங்கியதுமே... மற்ற இந்திரியங்கள் தத்தம் ஜீவிதத்தை இழக்க ஆரம்பித்தன.

கண் பார்வை இழந்தது; செவி கேட்க மறுத்தது; வாய் குழற ஆரம்பித்தது; மூக்கு மோப்ப சக்தியை இழந்தது;

உடல் முழுவதும் எறும்பு கடித்தாலும் உணர்வு இல்லை, ஈ மொய்த்தாலும் தெரியவில்லை.

புலன்கள் தங்களை இழுத்துக் கொண்டு போவதை அறிந்த உடல் தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்தது. தவிப்பு....! தத்தளிப்பு....! மிகுந்த தடுமாற்றம்...!


புலன்கள் எல்லாம் ஒரு சேர இப்போது கூச்சலிட்டன:

"ஏ பிராணனே... நீ போகாதே! ஓ ஜீவனே... நீ உடலை விட்டுப் பிரிந்துவிடாதே! நீயே சிறந்தவன்... நீயே சிறந்தவன்... எங்களுடைய சிறப்புகளெல்லாம் உன்னால்தான்... நீ இல்லாமல் நாங்கள் செத்தவர்களாவோம்...!” என்று கூக்குரலிட்டன.

ஐம்புலன்களைவிட பிராணனே சிறந்தது.

ஜீவனே இந்திரியங்கள் எல்லாவற்றையும் விட மேலானது என்பதைப் புலன்கள் உணர்ந்து தெளிந்தன.

பிராணனைவிட உயர்ந்தது ஆத்மா; ஆத்மாவைவிட உயர்ந்தது வேறு எதுவுமே இல்லை என்று சாந்தோக்கியம், பிரகதாரண்யகம் ஆகிய உபநிஷதங்கள் உணர்த்துகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p2033.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License