இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

பஞ்சபாண்டவர்கள் ஒரு குருகுலத்தில் கல்வி கற்பதற்குச் சென்றார்கள்.

ஏற்கனவே அங்கு பதினைந்து பேர் இருந்தார்கள். இவர்களையும் சேர்த்து அந்தக் குருகுலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை இருபது ஆயிற்று.

எல்லோரும் மிகவும் ஆர்வத்தோடு அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள்.

சில ஆண்டுகள் கழிந்தன.

எல்லோரும் ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்தது.

குரு ஒவ்வொரு மாணவராகக் கூப்பிட்டார்.

இது வரையில் நீ என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டார்.

அவரவர்கள் தாங்கள் எழுதி வைத்திருந்ததைக் கூறினார்கள்; கற்றுக் கொண்டதைச் சொன்னார்கள்.

அங்கே படிக்க வந்த மாணவர்கள் எல்லோருமே புத்திசாலி; இளவரசர்களாக இருப்பவர்கள்.

அதனால் அவர்களிடம் அபாரமான கல்வியறிவை குரு எதிர்பார்த்தார்.

ஒரு மாணவன் வந்தான். அவன்தான் எழுதி வைத்திருந்த பூகோள பாடம் முழுவதையும் படித்துக் காண்பித்தான்.

இப்படி ஒவ்வொரு மாணவனாக வந்து படித்துக் காட்டிவிட்டுச் சென்றார்கள்.

கடைசியாக தர்மர் வந்தார். பேசாமல் நின்றார்.

அவர் தன் கையில் இருந்த ஓலைச்சுவடிக் கட்டைப் பிரிக்கவே இல்லை.

குரு தர்மரிடம்தான் அதிகமாக எதிர்பார்த்தார். ஆனால் தர்மர் பேசாமல் நின்றார்.

நீ என்ன கற்றுக் கொண்டாய்? சொல்.. ஓலைச்சுவடியைப் பிரித்துப்படி..! என்றார் குரு.

தர்மர் அசையவே இல்லை, மெதுவாகச் சொன்னார்;

ஐயா.. நான் ஒன்றே ஒன்றுதான் கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையில் எனக்கு மிகவும் முக்கியமான பாடமாக அமையும்! என்றார்.

என்னிடம் இவ்வளவு காலம் இருந்து படித்து... கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதானா? என்று கேட்டார் குரு.


அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

மற்ற மாணவர்களைவிட தர்மன் பண்புகளில் உயர்ந்தவன்.. அறிவில் சிறந்தவன்.. வயதில் முதிர்ந்தவன்... இவனே இப்படி சொன்னால் மற்றவர்களின் நிலை என்ன? அவர்கள் கெட்டுப் போய்விடுவார்களே! என்று குரு நினைத்தார்.

தர்மா... நன்றாக யோசனை செய்து பதில் சொல்... குருகுலத்தில் நீ இவ்வளவு காலம் இருந்து என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறேன்! என்று குரு சிறிது கோபமாகக் கேட்டார்.

தர்மர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

அவர், இல்லை ஐயா.. இவ்வளவு காலமாக நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்றே ஒன்றுதான்! என்று திரும்பவும் கூறினார்.

இப்போது குருவுக்குக் கோபம் வந்துவிட்டது.

அவர் கோபத்துடன், உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைவிட வயதில் குறைந்தவர்கள் எவ்வளவோ பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்! எவ்வளவு விரிவாகப் படித்து காட்டினார்கள்! நீயும் ஓலைச்சுவடியில் நிறைய குறித்துத்தானே வைத்திருந்தாய் அதை ஏன் எடுத்துப் படிக்கக் கூடாது? என்று கேட்டார்.

ஐயா! நான் சொல்வது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் முக்கியமான பாடமாக ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். மற்ற எதையும் எடுத்துச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை! என்றார் தர்மர்.

இதைக் கேட்டதும் எல்லா மாணவர்களும் சிரித்துவிட்டார்கள்.

குருவுக்குக் கோபம் அளவு கடந்து போயிற்று.

அவர் தர்மரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்!

அதனால் தர்மரின் கன்னம் சிவந்து விட்டது... அவரது கண்கள் கலங்கின.

ஆனாலும் தர்மர் அமைதியை இழக்கவில்லை. தலைகுனிந்து நின்றார்.

தர்மரின் பிடிவாதம் முனிவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அதனால் அவர் தர்மரின் இன்னொரு கன்னத்திலும் அறைந்துவிட்டார்.

எல்லோரும் பயந்து போய் அமைதியாக நின்றார்கள்.


குரு அப்படி நீ கற்றுக்கொண்ட அந்த முக்கியமான பாடம்தான் என்ன? அதையாவது சொல்! என்று கத்தினார்.

ஐயா... அதை மட்டும் ஓர் ஓலைச் சுவடியில் தனியாகக் குறித்து வைத்திருக்கிறேன். இந்தாருங்கள் ... நீங்கள் படியுங்கள்! என்றார் தர்மர்.

குரு அதை வாங்கிச் சத்தம் போட்டு படித்தார்:

எப்படிபட்ட சோதனை ஏற்பட்டாலும், நிதானம் இழந்து கோபத்திற்கு ஆளாகக் கூடாது! - இதுதான் தர்மர் எழுதியிருந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த ஒரு விநாடியிலேயே குருவும், மற்ற மாணவர்களும், தர்மர் கற்றுக்கொண்ட வெறும் ஏட்டுச்சுரைக்காய் இல்லை... வாழ்க்கையில் பயன்படக் கூடிய மிக முக்கியமான அனுபவ பாடத்தை அவர் கற்றிருக்கிறார்! என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள்.

குருவின் கண்களில் கண்ணீர் ... அவர் தர்மரை அன்போடு கட்டித் தழுவிக் கொண்டு, தர்மா.... என்னை மன்னித்து விடு. நீ சாதாரண மாணவன் அல்ல...

நான் இது வரையில் தெரிந்து கொள்ளாத அனுபவ பாடத்தை நீ இப்போது எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டாய். நீ என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத்தான் பெருமை! என்றார்.

நிதானம் தவறக்கூடாது என்பது நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல பாடம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p2044.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License