இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

நல்லவைகளைக் கேட்கும் காலம்!

ஒரு சமயம் அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்த கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது.

அதனால், அவன் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு செழிப்பான வேறொரு ஊருக்குச் சென்று குடியேற விரும்பினான்.

செல்லும் வழியில் அவன் பசுமையான ஒரு கிராமத்தைப் பார்த்தான்.

அந்த ஊருக்குள் செல்ல விரும்பினான்.

அப்போது அவன் கண்ணில் ஓர் அதிசயமான காட்சி தென்பட்டது.

ஊர் எல்லையில் இறந்தவர்களைப் புதைத்து, அவற்றின் மீது பல நடுகற்களை வைத்திருந்தார்கள். ஆனால், நடு கற்கள் ஒவ்வொன்றிலும் இருந்த வாசகங்கள் அந்தணனைத் திகைக்க வைத்தன.

"இவர் இரண்டாண்டுகள் வாழ்ந்தார்', "இவர் ஒன்றரை ஆண்டு காலம் வாழ்ந்தார்", "இவர் தமது மூன்றாம் ஆண்டில் மறைந்தார்” என்பது போன்ற வாசகங் கள் நடுகற்களில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அந்தணன் கலக்கமடைந்தான்.

'அடக் கடவுளே! இந்தக் கிராமத்தில் அற்பாயுசு படைத்தவர்கள் தான் அதிகம் போலும்! எனவே இந்தக் கிராமத்தில் நான் குடியேறக் கூடாது!' என்று முடிவு செய்து, அவன் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

தங்கள் ஊருக்குள் வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்று, அந்த ஊர் மக்கள் பலரும் விரைந்து வந்தார்கள்.

அவர்கள் அந்தணனையும் அவனது குடும்பத்தாரையும் வரவேற்று, விருந்துண்ண அழைத்தார்கள்.

அந்த ஊர் மக்களின் இனிய சொல், விருந்தோம்பல், நற்பண்புகள் ஆகியவற்றைக் கண்டு அந்தணன் மகிழ்ந்தான். ஆயினும் நடுகற்களில் கண்ட வாசகங்கள் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்தன.

அன்று மாலை ஊரிலுள்ள கோயிலில் ஒரு சமயச் சொற்பொழிவு நடைபெற்றது.


அதற்கு ஊர் மக்கள் அனைவரும் திரண்டு சென்றார்கள். அவர்களின் கைகளில் ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது.

அந்தணனும் சமயச் சொற்பொழிவைக் கேட்கச் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி, அவனை வியப்பிலாழ்த்தியது.

எல்லோரும் மிகக் கவனமாக சமயச் சொற்பொழிவைக் கேட்டார்கள்; உடனுக்குடன் குறிப்புகள் எழுதிக் கொண்டார்கள்; சொற்பொழிவு முடியும் வரையில் மிகவும் அமைதியாக இருந்தார்கள்.

சொற்பொழிவு முடிந்து திரும்பி வரும் போது அந்தணன் பெரியவர் ஒருவரைச் சந்தித்தான். அவர் அவனிடம் நலம் விசாரித்தார்.

பெரியவர்: இந்த ஊர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

அந்தணன்: பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்...!

பெரியவர்: என்ன சந்தேகம்?

அந்தணன்: நான் ஊருக்கு வெளியே இருக்கும் நடுகற்களைப் பார்த்தேன். அவற்றைப் பார்த்த போது, 'இந்த ஊரில் ஐந்து வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களே இல்லையோ!' என்ற எண்ணம் தோன்றியது.

பெரியவர் (சிரித்தபடியே): அந்தணரே! தாங்கள் கற்றறிந்தவர்தான். ஆனால் புத்திசாலி இல்லை. என்னைப் பாருங்கள். எனக்கு எவ்வளவு வயதிருக்கும்?


அந்தணர்: அறுபதுக்கு மேல் இருக்கும்.

பெரியவர்: ஆமாம். இப்போது என் வயது அறுபத்தைந்து. என் தந்தைக்கு எண்பத்தெட்டு வயது. அவர் உயிரோடு இருக்கிறார். இதே ஊரில் என் வயதுள்ளவர்கள் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்...!

அந்தணர்: அப்படியானால் அந்த நடுகற்களில் இருந்த வாசகங்கள்....?

பெரியவர்: இந்த ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, எப்போதெல்லாம் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ, அதைக் கேட்கும் நேரத்தை நாங்கள் குறித்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு, சிறு வயது முதல் குறித்து வந்த நேரத்தை ஒன்றாகக் கூட்டி, அதையே நாங்கள் வாழ்ந்த காலமாக நினைக்கிறோம். 'வாழ்க்கையில் நல்ல விஷயங்களைக் கேட்கும் காலமே வாழும் காலம்' என்று நினைப்பதில் தவறு உண்டா?

பெரியவர் கூறியதைக் கேட்டு அந்தணனின் சந்தேகம் முற்றிலும் நீங்கியது. அன்று முதல் அவனும் குறிப்பேடு வைத்துக் கொண்டு, நல்ல விஷயங்களைக் கேட்கும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்குவதென்றும் முடிவு செய்தார்.

- யோகிஜி மகராஜ் சொன்ன கதை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p2049.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License