இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கரப்பான் பூச்சியின் தியாகம்

மெல்லிய இருள். லேசான நெடி. வழுக்கும் தரை. அழுக்குச் சுவர். அது அந்தப் பாலவாடி சமையலறை.

பால்பாத்திரம் மூடாமல் திறந்து கிடக்கிறது. சூடாக இருந்தவரை எதுவும் அதைச் சீண்டவில்லை. இப்போது பல்லிகளுக்குக் குளிர்விட்டுப் போனது அதைச் சுவைக்க.

ஒரு சின்னப் பல்லி பாத்திரத்தின் விளிம்பில் சென்ற போது நம் கரப்பான் பூச்சியம்மா பறந்து அதை விரட்ட, சின்னப் பல்லி தடுமாறி ஓட, 'ஹே' என ஒரே கூச்சல்.

''அம்மா, சூப்பர் மா'' என்று நான்கு கரப்பான் பூச்சிக் குஞ்சுகளும் தாயைப் பாராட்டின.

''கண்ணுகளா, நமக்கு வாழ்வு தருகிற இந்த இல்லத்திற்கு நாம விசுவாசமா இருக்கணும். இந்தப் பாலவாடி குழந்தைகள் அப்பா அம்மா இல்லாத அநாதைகள்'' என்பதற்குள் ''பாவம்மா அவங்க'' என்றது கடைக்குட்டி.

''இந்தக் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆயிடக் கூடாதுன்னுதான் பல்லியை விரட்டினேன். பல்லியோட எச்சில்பட்டாலோ அல்லது நம்ம மாதிரியான பூச்சி பாலில் விழுந்தாலோ பால் கெட்டுப் போயிடும். அதை இந்தக் குழந்தைகள் சாப்பிட்டா விபரீதம் நடக்கும்.''

''அதனாலதான் பல்லியை விரட்டினியாம்மா?'' முதல் குட்டி தாயைப் பெருமையுடன் கேட்டது.

தாயும் குட்டிகளும் பேசிக் கொண்டிருந்த போது, சட்டென முதல்குட்டி கத்தியது: ''அதோ பாரும்மா, சீக்கிரம் போய் இந்தப் பல்லியையும் விரட்டு.''

மற்றொரு பெரிய பல்லி பாத்திரத்தில் அமர்ந்து பாலை நக்க ஆரம்பித்தது. தாய்ப்பூச்சி பரபரப்பானது.

''போம்மா, பறந்து அதை விரட்டு'' என்றன குட்டிகள்.

''இல்லடா, இந்தப் பல்லி ரொம்பப் பெரிசு. என்னை அப்படியே 'லபக்'கென்று பிடிச்சு சாப்புட்டுடும்.''


''நீ பயப்படாதேம்மா, உன் பிள்ளைங்க நாங்க இருக்கோம். இந்தப் பல்லி நக்கிட்டா நஞ்சாயிடுமில்லே. நம்ம பாலவாடி பிள்ளைங்க செத்தாலும் செத்துடும். அதனால நாம அஞ்சி பேரும் பறந்து பல்லியை விரட்டிடலாம்'' என்றது இரண்டாவது குட்டி வீராவேசமாக.

தாய்ப்பூச்சி பரபரப்புடன், ''ஐயையோ நான் விட மாட்டேன். என் பிள்ளைங்களை நான் அந்தப் பல்லிக்கு காவு தர மாட்டேன்.... பசங்களா, ரெக்கையே முளைக்காத உங்களால இப்போதைக்குப் பறக்க முடியாது'' என்றது.

''ஒண்ணு செய்யலாமா? பால் விஷமாகுதுன்னு ஒரே கத்தலா கத்தி, பாலவாடி பெரியவங்களைக் கூப்பிடலாம்'' மூன்றாவது குட்டி முழங்கியது.

''நாம என்ன கத்து கத்தினாலும் மனுசங்களுக்குப் புரியாதுப்பா''

''பின்ன என்ன பண்றது?'' கோபமாகக் கேட்டது மூன்றாவது குட்டி.

''பால் நஞ்சாயிடுச்சி. பல்லியை நாம விரட்ட முடியாது. இந்த ஜனங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க நம்மால முடியாது. கடவுள்கிட்டே பாரத்தைப் போட்டு, பிரார்த்தனை செய்வோம்:

''கடவுளே, இந்தப் பாலை இந்தக் குழந்தைங்க சாப்பிடாம இருக்க ஏதாவது செய்யுங்க'' அம்மா கூறக் கூற, குட்டிகள் திருப்பிக் கூறின.

பிறகு அந்த ஐந்து ஜீவன்களும் ஆண்டவனை வேண்டின. சற்று நேரத்தில் கோடை மதிய வேளையில் எல்லாம் தூங்கியும்விட்டன.

நான்கு மணி. மணியடித்தது. குழந்தைகளுக்குப் பால் வழங்கும் நேரம். அலறியடித்து விழித்தது தாய் கரப்பான்பூச்சி. அதன் இறக்கைகளிலிருந்து ஒவ்வொரு பூச்சியாகச் சோம்பல் முறித்துக் கொண்டு மெல்ல வெளிவந்தன.

''டேய் பசங்களா, எங்கேடா நம்ம சின்னக்குட்டி? எங்கே போயிட்டான் பாரு?'' தாய்ப்பூச்சி பரபரத்தது. மற்ற பூச்சிகளும் தேடின.


சமையலறையில் சட்டென்று ஒரு குண்டு பல்பு எரிந்தது. இரண்டு பேர் உள்ளே தடதடவென்று நுழைந்தார்கள்.

''சேச்சே, நம்ம சமையல்காரனுக்கு எத்தனை முறை சொன்னாலும் எதையும் ஒழுங்கா வைக்கிறதில்லே... பாரு, பால் பாத்திரத்தை மூடவே இல்லே'' மேனேஜர் எரிந்து விழுந்தார்.

''சார் இந்தப் பாலைத் தந்தா பிள்ளைங்களுக்கு வயித்தாலப் போகும்'' என்றார் ஆயா.

''வயித்தாலே மட்டுமில்ல என்னோட வேலையும் போயிடும். இந்தப் பாலைக் கொட்டிடு. இதுங்களுக்கு வேற ஏதாச்சும் சீக்கிரமா பண்ணிப் போடு'' என்றார் மேனேஜர் எரிச்சலாக.

ஆயா பாலைக் கொட்டினாள். அதில் கடைக்குட்டி கரப்பான்பூச்சி விழுந்து இறந்து கிடந்தது, தியாகசீலனாக.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p2059.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License