இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

உயிர்ப் பலியிடுவது சரியா?

காளி கோயில் ஒன்றில் பூசாரி ஒருவன் பூசை செய்து கொண்டிருந்தான்.

மார்கழி மாதம் விடியற்காலையில் குளிர்ந்த நீரில் மூழ்கிக் காளி கோயிலுக்குத் தயிர்ச்சாதம் நிவேதனம் செய்வான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய அன்பளிப்பைப் பெற்று அதைச் செய்து கொண்டிருந்தான்.

தட்டில் பணம் போடுபவர்களுக்கு அதிகமாகத் தயிர்ச்சாதம் தருவான். குழந்தைகள் கேட்டால் பெயருக்குக் கையில் தடவி அனுப்புவான்.

ஒரு நாள், அந்தப் பூசாரிக்கு உணவு மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்கு தகுந்த மருந்து சாப்பிட வேண்டும் என்கிற அறிவில்லாதவன் அவன்.

அவன் இதற்காகக் காளிதேவியிடம், “தாயே, இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்றினால், உனக்கு இரு ஆடுகளைப் பலி கொடுக்கிறேன்” என்று வேண்டினான்.

அவன் மனைவி அவனது காய்ச்சலுக்குத் தகுந்த மருந்தை செய்து கொடுத்தாள்.

அவனது காய்ச்சலும் நின்று விட்டது.

ஆனால், அவன் ஆடி மாதம் அம்மனுக்கு இரு ஆடுகளை வெட்டிப் பலி கொடுக்க முடிவு செய்தான்.

இரு ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி வெட்டுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தினான்.



அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீரைத் தெளித்தான். மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டதும் இயற்கையாகவே அந்த ஆடுகள் தலையைச் சற்று உதறின. இந்த உதறல் காளி தேவி ஆட்டை வெட்டுவதற்கு சம்மதித்து விட்டதாகத் தெரிவித்து வெட்டினான்.

அந்த நகரை ஆட்சி புரிந்த மன்னருக்கு ஒரு மகனும், அமைச்சருக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். இருவருமே அனைத்துக் கலைகளிலுமே வல்லவர்களாகவும் ஆனார்கள்.

மன்னன் தனக்குப் பின் மகனுக்கு முடிசூட்டு விழாவை நடத்தினான். அமைச்சரின் மகன் அவனுக்கு உதவியாக நியமிக்கப்பட்டான்.

மன்னன் மகனுக்கு முடிசூட்டிய பின்பு பல ஆண்டுகளாகப் பருவ மழை கூட பெய்யவில்லை. மழையில்லாததால் தண்ணீர் இல்லை. மக்களுக்குக் குடிக்கக் கூட நீரில்லாமல் தவித்தார்கள்.

ஒரு நாள் மன்னன் மகனும், அமைச்சர் மகனும் இரவு பத்து மணிக்கு மேல் காளி கோயிலுக்குச் சென்றார்கள்.

இதைக் கண்ட பூசாரி, தன்னுடைய தவறு ஏதாவது தெரிந்து தன்னைத் தண்டிக்க வருகிறார்களோ என்கிற அச்சத்தில் காளிதேவியின் சிலைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.

மன்னன் மகன் காளிதேவி முன்பு வணங்கியபடி, “தேவி, எனக்கு முடிசூட்டிய பின்பு பல ஆண்டுகளாக மழையில்லை. நீரின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். அருள் புரிந்து மழை பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.

காளிதேவி, “மன்னன் மகனே, என் கோயிலில் ஒரு நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.

மன்னன் அமைச்சர் மகனைப் பார்த்து, “நண்பனே, மக்களுக்கு நான் தந்தை போன்றவன். மக்களுக்கு மழை கிடைக்கும் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிட்டுவிட்டு நீ அரசனாகப் பதவி ஏற்று அரசைச் சிறப்பாக நடத்து.” என்றான்.

அமைச்சர் மகனோ, “தங்களின் நண்பனாகிய நான் தங்களைப் பலியிடுவதா? வேண்டாம், நீங்கள் என்னைப் பலியிட்டு எனக்குப் பதில் சிறந்த ஒருவரைத் துணையாகக் கொள்ளுங்கள்” என்றான்.

இப்படியே இவர்கள் இருவருக்குள்ளும், “என்னைப் பலியிடு! என்னைப் பலியிடு...!” எனும் வாதம் தொடர்ந்தது.



உடனே மன்னன் மகன், “நாம் இருவரும் பலியிடுவதற்கு வாக்குவாதம் செய்வதை விட, காளிதேவியிடமே கேட்போம். அவர் யாரைப் பலியிடச் சொல்கிறாரோ, அப்படியே செய்வோம்” என்று கூறினான்.

“தேவியே, உன் கோயிலில் நான் பலியாக வேண்டுமா? இல்லை, அமைச்சரின் மகனான என் நண்பன் பலியாக வேண்டுமா? நீயே முடிவைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டான் மன்னன்.

அப்போது காளி தேவி, “மன்னனே, நீயும் பலியாக வேண்டாம், அமைச்சரும் பலியாக வேண்டாம். என் சிலைக்குப் பின்னால், ஒளிந்திருக்கும் பூசாரிதான் இங்கு பலியாக வேண்டும்” என்றாள்.

இதைக் கேட்ட பூசாரி நடுங்கியபடி சிலைக்குப் பின்பிருந்து வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது.

“காளி தேவியே, நீயெல்லாம் ஒரு தெய்வமா? உனக்கு ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பூசை செய்து வருகிறேனே... என்னைப் போய்ப் பலியிடச் சொல்கிறாயே...உனக்குக் கருணையில்லையா? இவ்வுலகில் இருக்கும் அனைவரையும் காப்பவள் நீயில்லையா? நீயே பலி கொடுக்கச் சொல்லலாமா? நீ தெய்வமில்லை... நீ ஒரு அரக்கி” என்று வசைபாடத் தொடங்கினான்.

காளிதேவி, “பூசாரியே, படபடவென்று பேசாதே. பதற்றம் அடையாதே... உனக்கு அதிகமான உணவு உண்டு வந்து காய்ச்சல் வந்தால், அதற்கு மருந்து சாப்பிடாமல், என் கோயிலில் இரு ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்தாயே... அந்த ஆடுகள் செய்த பாவம்தான் என்ன? நான் இந்தப் புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்பதை இன்றுதான் உணர்ந்தாயா? வாயில்லாத அந்த உயிர்களை அன்று நீ பலியிட்டாய். இன்று அவை உன்னைப் பலி வாங்க மன்னனாகவும், அமைச்சராகவும் பிறந்து வந்திருக்கின்றன.” என்றாள்.



பூசாரிக்கு அப்போதுதான் தன் பழைய செயல்கள் நினைவுக்கு வந்தன.

பூசாரி மேல் தண்ணீர் ஊற்றப்பட்டு நனைய வைக்கப்பட்டான். அவன் மேல் மஞ்சள் நீர் சிறிது தெளிக்கப்பட்டது. அவன் அச்சத்துடன் தலையை உதறினான். மன்னன் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான்.

அப்போது அவன் முன் காளி தேவி தோன்றினாள்.

“மன்னனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.” என்றாள்.

மன்னன், “தாயே, இந்தப் பூசாரி குற்றத்தை உணர்ந்து கொண்டதுடன் ஒப்புக் கொண்டான். மன்னிப்பதுதான் கடவுள் இயல்பு. இவனை மன்னித்து உயிர்ப்பிதுடன் என் நாட்டிற்கு மழை பெய்து அனைத்து வளங்களும் கிடைத்திட அருள் புரிய வேண்டும்” என்றான்.

காளி தேவியும் அப்படியே பூசாரியை உயிர்ப்பித்ததுடன் மழையையும் பொழியச் செய்தாள்.

அன்று முதல் பூசாரி பலியிடும் வழக்கத்தைக் கோயிலிலிருந்து அகற்றினான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p244.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License