இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

சாகாவரம் கேட்ட முனிவர்!

ஒரு முனிவர் நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.

அவருடைய தவத்தில் மகிழ்ச்சியடைந்த கடவுள் அவரின் முன்பாகத் தோன்றினார். “பக்தா! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” என்று கேட்டார்.

“எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வு அளிக்க வேண்டும்” என்றார்.

“மானிட உடல் எடுத்த பின்பு இளமை, முதுமை அதன் பின்பு மரணம் என்பதுதான் பொது நியதி! எனவே மரணம் தவிர்க்க முடியாதது. அதைத் தவிர்த்து, வேறு ஏதாவது கேள்!” என்று கேட்டார் கடவுள்.

முனிவர் தன்னுடைய மரணத்தைத் தவிர்த்து இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி கடவுளிடம் தந்திரமாக, “நான் சாகும் நிலையில் எனது உயிர் வேறொரு உயிரினத்தின் உடலில் நுழைய அனுமதிக்க வேண்டும். அதாவது, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போல் வேறொரு உயிரினத்தின் உடலுக்குள் புகுந்து கொள்ள வேண்டும்” என்று வரத்தைக் கேட்டார்.

கடவுளுக்கு முனிவரின் உள் நோக்கம் புரிந்து விட்டது. அவர் முனிவருக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென்று நினைத்தார்.

“அப்படியா! ஆகட்டும்” என்று வரமளித்து விட்டு மறைந்தார்.

முனிவருக்கு வயோதிகம் ஏற்பட்டது. மரணம் வந்து விடும் என்று பயம் வந்தது. மரணபயத்தில் குளக்கரைப் பக்கமாகச் சென்றார்.

அங்கு ஒரு தவளை தரைக்கும் தண்ணீருக்குமாக மாறி மாறித் தாவிக் கொண்டிருந்தது.

முனிவருக்கு அந்தத் தவளையின் உடலுக்குள் புகுந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. உடனே அவர் உயிர் தவளையின் உடலுக்குள் சென்று விட்டது.

தவளையின் உடலுக்குள் நுழைந்த அவருக்குத் தவளை போன்று கத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. தவளையைப் போல் கத்தத் தொடங்கினார்.

தவளைச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த கரு நாகம் ஒன்று தவளையைப் பாய்ந்து பிடித்து விழுங்கியது.

பாம்பின் வயிற்றுக்குள் சென்ற தவளையின் உடல் செரிமானமாகும் நிலையில் தவளையின் உடலிலிருந்து கருநாகத்தின் உடலுக்குள் புகுந்தார் அந்த முனிவர்.

அந்தப் பாம்பு வயல்வெளிக்குள் சென்றது. அந்த நேரம் வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி அதைப் பார்த்து விட்டான். அவன் அங்கிருந்த பெரிய கட்டையை எடுத்து பாம்பைத் தாக்கினான்.

பாம்பின் தலை நசுங்கியது. அதன் பின்னர் அந்தப் பாம்பின் உடலில் இருக்க முடியாத நிலையில் முனிவர் அந்த விவசாயியின் உடலில் நுழைந்தார்.

விவசாயிக்கும் வயோதிகமாகி விட்டது. அதைக் கண்டு பயந்து போன முனிவர் விவசாயியின் வீட்டிலிருந்த ஒரு ஆட்டின் உடலுக்குள் சென்றார்.

விவசாயி அந்த ஆட்டை அவனது குலதெய்வத்துக்குப் பலி கொடுப்பதற்காகவே வளர்த்து வந்தான். எனவே அவன் அதைக் கோயிலில் பலியிட்டான்.



அந்த முனிவர் சோர்ந்து போனார். அவரது சொந்த உடலுக்குள்ளேயே போய் விடலாமென்று முடிவு செய்தார்.

அவருடைய உடல் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தார். அந்த உடலைப் புதைத்து அழுகி வெறும் எலும்புக் கூடாக இருந்தது. எலும்புக் கூடாக இருந்த அந்த உடலுக்குள் போக முடியவில்லை.

அவர் மனம் வருந்தினார், “கடவுளிடம் சாகாவரம் பெற்ற நான் நோகாவரம் கேட்கத் தவறி விட்டோமே..” என்று நினைத்தபடி கடவுளை அழைத்தார்.

கடவுள் அவர் முன் தோன்றினார்.

கடவுள் முனிவரிடம், “பக்தனே, என்னை அழைத்தது ஏன்?” என்று கேட்டார்.

முனிவர், “கடவுளே எனக்கு நீண்ட நாட்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. எனவே அனைத்து மனிதர்களுக்கும் அளிக்கும் மரணத்தை எனக்கும் அளித்து உதவுங்கள்” என்றார்.

கடவுள் அவரிடம், “முனிவரே! நீ சாகாவரம் பெற விரும்பியதில் தவறில்லை. ஆனால் சாகாமையைப் பற்றி நீ கொண்டிருந்த கருத்தில்தான் தவறு இருக்கிறது. உனது சிந்தையை என்னில் நிலைப்படுத்திக் கொண்டால் உனக்கு மோட்சத்தை அருளி இருப்பேன். ஆனால், நீ இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று விரும்பியதால், அதிலுள்ள கஷ்டத்தை நீ உணர வேண்டுமென்பதற்காகத்தான் நீ கேட்ட வரத்தை அளித்தேன். இனி உனக்கு உண்மையான சாகாவரம் என்கிற மோட்ச வாழ்வு அளிக்கிறேன்” என்றார்.

முனிவரும் மகிழ்ச்சியுடன் மோட்ச வாழ்வடைந்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p295.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License