இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கொடியவருக்கு உதவலாமா?

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன.

அந்த விலங்குகளைப் பிடிக்கப் பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம்.

ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்து விட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.

அப்போது அந்தக் காட்டு வழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து அந்தப் புலி, "ஐயா, தயவு செய்து என் பக்கம் வாருங்கள் "என்று அழைத்தது.

புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான்.

அவனைப் பார்த்த அந்தப் புலி, "ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்குக் கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் போனால் உங்களுக்கு அந்தப் புண்ணியம் கிடைக்கும்" என்று பரிதாபத்துடன் உதவி கோரியது.

புலிக்கு உதவலாமென்று நினைத்த அந்த வழிப்போக்கன், அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்து போனான்.

உடனே வழிப்போக்கன், "உனக்கு உதவலாம் . ஆனால், நீயோ கொடிய மிருகம். உன்னைக் கூண்டிலிருந்து வெளியேற்றி விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான்.

பின்னர் தன் வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி, "ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களைத் தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா. அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று உங்களுக்குத் தெரியும்" எனக் கெஞ்சியது.



தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது. பின்னர், "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது.

அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே என்று எண்ணியபடி புலியின் சத்தியத்தை நம்பி அந்தக் கூண்டிலிருந்து அதை விடுவித்தான்.

வெளியே வந்த புலி, ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது.

அவன் பயந்து அலறினான்.

"புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று நீ சத்தியம் செய்தை நம்பித்தானே உன்னை விடுவித்தேன். ஆனால், இப்போது என்னையேக் கொல்ல வருகிறாயே..." என்றான் அவன்.

"அப்பாவி மனிதனே, பட்டினியாய் இருப்பவர் முன் உணவு இருக்கும் போது, அதை உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது கூட உனக்குத் தெரியவில்லையே?" என்றது புலி.

"புலியே, நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்." என்று நடுங்கியவாறே அவன் சொன்னான்.

அப்போது ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.

நரியைப் பார்த்த வழிப்போக்கன் புலியிடம், "இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.

புலி "நரி நம் இனத்தைச் சேர்ந்ததுதானே. இது நமக்குச் சாதகமாகத்தான் சொல்லும்” என எண்ணிக் கொண்டு நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்த புலி அதிகாரத்துடன், "நரியாரே, நீங்களே எனக்குச் சரியான நியாயம் சொல்லுங்கள். நான் கூண்டுக்குள் இருந்தேன், இந்த மனிதன் வெளியே போய்க் கொண்டு இருந்தார். இவரிடம் என்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் என்னை வெளியில் வந்து கொன்று விடக் கூடாது என்று கேட்டார். நானும் அதற்குச் சம்மதித்துச் சத்தியம் செய்து கொடுத்தேன். அவர் என்னை விடுவித்தார். என் கண் எதிரே நல்ல உணவாக இவர் இருக்கும் போது, அதை விடலாமா? அதனால்தான் இவரைப் பிடித்து வைத்திருக்கிறேன். இவரை நான் உணவாக்கிக் கொள்வது சரிதானே..?” என்றது.



நரி வழிப்போக்கனைப் பார்த்தது. அவன் பயத்தில் இருந்தான்.

நரி புலியைப் பார்த்து, “புலியாரே, நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு யார் கூண்டில் இருந்தது? யார் வெளியில் இருந்தது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டதால் சரிவர புரியமாட்டேங்குது” என்றது.

புலி பொறுமையிழந்து உறுமியது.

அதைக்கண்டு பயப்படுவது போல் பாசாங்கு செய்த நரி, "புலியாரே, என்னை மன்னியுங்கள் எனக்கு வயதாகி விட்டதால் எனக்கு மறதியும் அதிகமாக இருக்கிறது. புலியாரே தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள்” என்றது.

புலி உடனே கூண்டுக்குள் சென்று நின்று கொண்டு, "இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு தன்னுடைய தரப்பை விளக்கமாகச் சொன்னது.

நரி அந்த வழிப்போக்கனிடம், "புலியார் உள்ளே இருக்கும் போது கூண்டுக் கதவு திறந்திருந்ததா? மூடியிருந்ததா?” என்று கேட்டது.

வழிப்போக்கன், “நரியாரே, கூண்டின் கதவு மூடியிருந்தது” என்றான்.

உடனே நரி, “அப்படியானால், கூண்டை மூடி வையுங்கள்” என்றது.

வழிப்போக்கனும் கூண்டை மூடினான்.

நரி, "அய்யா, கொடியவர்களைக் கண்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? உங்களிடம் “துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழி கூட இருக்கிறதே... அப்படியிருக்க இப்படிப் புலியைக் காப்பாற்றுகிறேன் என்று அதனிடம் மாட்டிக் கொண்டீர்களே...! இனியும் இப்படி இருக்காதீர்கள்... நீங்கள் உங்கள் வழியில் போங்கள்...” என்றபடி காட்டுக்குள் ஓடிவிட்டது.

“கொடியவருக்கு உதவி உயிரை இழக்கத் தெரிந்தேன். நல்லவேளை நரியின் உதவியால் தப்பித்தேன்” என்று எண்ணியபடி அங்கிருந்து சென்றான் அந்த வழிப்போக்கன்.

“அறியாமை, அவசரம், ஆணவத்தால் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே... நம்மினம்தானே என்று எண்ணி நரியின் பேச்சைக் கேட்டு மாட்டிக் கொண்டோமே” என்று எண்ணியபடி கூண்டுக்குள் வளைய வந்தது அந்தப் புலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p307.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License