இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

முள்ளம் பன்றிக்கு முள் தேவைதானா?

ஒரு காட்டில் ஒரு தாய் முள்ளம் பன்றியும் அதன் குட்டியும் வசித்து வந்தன. குட்டி முள்ளம் பன்றி மிகவும் துருதுருவென இருக்கும். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருக்கும். ஒரு நாள் அது காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன் விளையாடச் சென்றது.

மற்ற விலங்கு குட்டிகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன.

முள்ளம் பன்றிக் குட்டி அங்கே சென்று, "என்னையும் விளையாட சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டியது.

மற்ற குட்டிகளும் அதை விளையாடச் சேர்த்துக் கொண்டன.

எல்லா விலங்குக் குட்டிகளும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன. முள்ளம் பன்றிக் குட்டி ஓடிப் பிடித்து விளையாடும் போது அதன் முட்கள் மற்ற குட்டிகள் மீது குத்தியது. இதனால் மற்ற குட்டிகள் முள்ளம் பன்றிக் குட்டியிடம் "உன்னுடைய முட்கள் எங்கள் மேல் குத்துகிறது. அதனால் எங்களுடன் விளையாட வேண்டாம்." என்று கூறின.

அதற்கு முள்ளம் பன்றிக் குட்டி "நான் உங்கள் மேல் குத்தாமல் விளையாடுகிறேன். என்னை விளையாட்டிலிருந்து நீக்க வேண்டாம்" என்று கேட்டது.

ஆனாலும் அதற்கு மற்ற குட்டிகள் சம்மதிக்கவில்லை.

இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றிக் குட்டி சோகமாக வீடு திரும்பியது.

அம்மாவிடம் வந்து அழுதது. அது தன் அம்மாவிடம் "அம்மா எனக்கு இந்த முட்கள் வேண்டாம். எல்லாவற்றையும் வெட்டி விடு" என்று கூறியது.

அதற்கு அதன் அம்மா "நீ அப்படிச் சொல்லக் கூடாது. இயற்கையில் கிடைத்துள்ள அந்த முட்கள்தான் நமக்கு அழகு. நம்மை எதிரிகள் யாராவது தாக்க வந்தால் நாம் அந்த முட்களால் அவர்களைக் குத்தித் தப்பித்து கொள்ளலாம்" என்றது.

ஆனால் குட்டி அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. "அதெல்லாம் கிடையாது. எனக்கு இப்போதே எனது முட்களை வெட்டி விடு" என்று அடம் பிடித்தது.

அதற்கு அதன் அம்மா "நான் அந்த முட்களை வெட்டி விட்டு விடுவேன். ஆனால் திரும்பி வேண்டுமென்றால், அது உடனடியாக கிடைக்காது" என்றது.

"அதனால் பரவாயில்லை" என்றது குட்டி.

தாயும் தன் குட்டியின் ஆசைப்படியே அதன் முட்களை வெட்டி விட்டது.



முட்களைக் கத்தியால் சரித்து விட்ட பின் முள்ளம் பன்றிக் குட்டி மொழு மொழுவென இருந்தது. உடனே முள்ளம் பன்றிக் குட்டி மீண்டும் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றது. மொழு மொழுவென இருந்த முள்ளம் பன்றிக் குட்டியைப் பார்த்தவுடன் எல்லாக் குட்டிகளும் கொல்லெனச் சிரித்து விட்டன.

உடனே கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி "நீங்கள் எல்லாரும் குத்துகிறது என்று சொன்னதால்தான், நான் என் அம்மாவிடம் சொல்லி முட்களை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் இப்படிச் சிரித்தால் எனக்குக் கோபம் வரும்" என்று கூறியது.

உடனே மற்ற குட்டிகள் "சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. இப்போது நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று கூறி சிரித்துக் கொண்டன. "உன்னை நாங்கள் மறுபடியம் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறோம்." என்று கூறின.

முள்ளம் பன்றிக் குட்டி மொழு மொழுவென இருந்ததால் எல்லாக் குட்டிகளும் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன. பிறகு ஒரு குரங்கு குட்டி அதைக் கிள்ளி, கிண்டல் செய்தது. மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி, குரங்குக் குட்டியுடன் சண்டைக்கு சென்றது. இப்படியாகச் சண்டை அதிகரித்தது.

இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றிக் குட்டி, மீண்டும் சோகமாக வீடு திரும்பியது.

அதைப் பார்த்த தாய் முள்ளம் பன்றி, குட்டியைப் பார்த்து "ஏன் மிகவும் சோகமாக வீடு திரும்பி விட்டாய்?" என்று கேட்டது.

முள்ளம் பன்றிக் குட்டி, நடந்ததைக் கூறியது.

உடனே அதன் அம்மா "இதற்குத்தான் நான் முள்ளை எல்லாம் வெட்ட வேண்டாம் என்று கூறினேன்" என்றது.

அப்போது முள்ளம் பன்றிக் குட்டி, "எனக்கு மறுபடியும் எனது முட்கள் வேண்டும். எப்போது அவை வளரும்?" என்று கேட்டது.

அதன் அம்மா "அவை வளர ஒரு மாதம் வரை ஆகும்" என்றது.

அதற்குக் குட்டி "ஐயோ, அது வரை நான் என்ன செய்வது?" என்று வருத்தப்பட்டது.

அதன் அம்மா "அது வரை விளையாட எங்கும் போக வேண்டாம். வீட்டில் பாடம் படித்துக் கொண்டு சும்மா இரு" என்றது.



இப்படியாக ஒரு மாதம் ஓடியது. அதற்குள் குட்டிக்கு முட்கள் மீண்டும் வளர்ந்து விட்டன. மறுபடியும் முள்ளம் பன்றிக் குட்டி தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றது. இப்போது மற்ற குட்டிகள் அதைப் பார்த்து "மீண்டும் நீ முட்களுடன் வந்து விட்டாயா? நீ எங்களுடன் விளையாடினால் உன் முட்கள் எங்கள் மேல் குத்தும்" என்றன.

மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி, "என்ன நீங்கள் எல்லாம் விளையாடுகிறீர்களா? முள் இல்லாமல் வந்தால் கிண்டல் செய்து என்னைக் கிள்ளுகிறீர்கள். முட்களுடன் வந்தால் குத்தும் என்கிறீர்கள். இப்போது என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறீர்களா? அல்லது எல்லாரையும் எனது முள்ளால் நன்றாகக் குத்தி விடட்டுமா? " என்று அதட்டியது.

இதைப் பார்த்துப் பயந்த மற்ற குட்டிகள் அதை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொண்டன. இப்போது முள்ளம் பன்றிக் குட்டி தனது நண்பர்களுடன் விளையாடிச் சந்தோசமாக நாட்களைக் கழித்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p335.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License