இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

அகந்தையை அடக்க...

மாம்பழச் சிங்கக் கவிராயர் தன் சிறு வயதிலேயே தன் பார்வையை இழந்து விட்டார். இருப்பினும், தன்னுடைய முயற்சியால் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் நல்ல புலமை பெற்றார்.

அவருடைய புலமையை மதித்து இராமநாதபுரம் மன்னர்கள் பொன்னுச்சாமி, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் அவரை அரசவைப் புலவர்களாக வைத்துக் கொண்டனர்.

ஒருநாள் விசுவநாத பாரதியார் எனும் புலவர் அவைக்கு வந்தார்.அவர், தாம் அரசர் பொன்னுச்சாமியைப் பாராட்டி நூறு பாடல்கள் எழுதியிருப்பதாகவும், அவற்றைச் சபையில் அரங்கேற்றம் செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.

அவருக்குச் சபையிலிருந்த மாம்பலச் சிங்கக் கவிராயரைக் கண்டு அவருக்குள் ஒரு அச்சம் வந்தது. எனவே, அவர் சபையில் இருப்பது சரியல்ல எனும் பொருள்பட “அவைக்களம் மங்களகரமாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மன்னர் பொன்னுச்சாமிக்கு எதுவும் புரியவில்லை. சபையைச் சுற்றிலும் பார்த்தார். “சபை மங்களகரமாகத்தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் நூலை அரங்கேற்றம் செய்யலாம்” என்றார்.

ஆனால், மாம்பலச் சிங்கக் கவிராயர் விசுவநாத பாரதியாரின் பழிப்பைப் புரிந்து கொண்டு விட்டார். அவருடைய அகந்தையை அடக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

விசுவநாத பாரதியார் தம் நூலின் நூறு பாடல்களையும் ஒரு தடவை படித்து முடித்து விட்டு, பிறகு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லத் தொடங்கினார்.

அப்பொழுது மாம்பழச் சிங்கக் கவிராயர் எழுந்து, “இந்நூல் ஏற்கனவே எம்மால் ஒரு செல்வரிடம் அரங்கேற்றம் செய்யப்பட்டு, அவரிடம் நாம் செல்வமும் பெற்றோம். நாம் இயற்றிய நூலை இவர் தம் நூல் என்று கூறுகிறார். எனவே, மன்னர் இதுகுறித்து விசாரித்துப் புலவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். விசுவநாத பாரதியாருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.

உடனே அவர், “கவிராயர் கூறுவது அத்தனையும் பொய். இது இவர் இயற்றிய நூல் என்றால், இவற்றிலிருந்து சில செய்யுள்களை மட்டும் இவர் சொல்லட்டும்” என்றார்.

கவிராயர், “சில செய்யுள்கள் என்ன? நூலிலுள்ள நூறு செய்யுள்களையும் இப்போதே முழுமையாகச் சொல்கிறேன்” என்று நூறு செய்யுளையும் சொல்லி முடித்தார்.



மன்னர் பொன்னுச்சாமிக்கோ ஒன்றும் விளங்கவில்லை. விசுவநாத பாரதியாரைப் பார்த்தால் செய்யுளைத் திருடி எழுதியதைப் போல் தோன்றவில்லை. ஆனால் கவிராயரோ இந்த நூலைத் தானே இயற்றியதாகவும், நூறு பாடல்களையும் அப்படியே சொல்லி முடித்து விட்டார்.என்னசெய்வது என்று புரியாமல் விழித்தார்.

மன்னர் சிறிது நேரத்துக்குப் பின்பு, இந்த விசயத்தில் மாம்பழச் சிங்கக் கவிராயரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

உடனே மன்னர், “மாம்பழச் சிங்கக் கவிராயரே, இந்தப் பாடலை உண்மையில் யார் இயற்றியது? என்று தாங்களே கண்டறிந்து சொல்ல வேண்டும்” என்றார்.

மாம்பலச் சிங்கக் கவிராயர், “இந்த நூலை இயற்றியது நான் என்று சொன்னது உண்மையில் தவறானது. இந்த நூலை விசுவநாத பாரதியார்தான் இயற்றியிருக்கிறார்” என்றார். மன்னர், “அப்படியானால், இந்த நூறு பாடல்களையும் தாங்கள் அப்படியே தங்கு தடையின்றி சொன்னீர்களே” என்றார்.

“அதில் கஷ்டம் ஏதுமில்லை அரசே, புலவர் நூறு பாடல்களுக்கான விளக்கத்தைச் சொல்வதற்கு முன்பு நூறு பாடல்களையும் சொன்னபோதே அவை என் மனத்தில் பதிந்து போய் விட்டன்” என்றார் கவிராயர்.

“அப்படியெனில், இந்தப் பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இயற்றியதாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் மன்னர்.

“விசுவநாத பாரதியாரின் அகந்தையை அடக்குவதற்காகத்தான். பார்வையில்லாதவன் நான் இங்கு இருக்கக் கூடாது என்று என்னைப் பழிப்பதற்காக, தொடக்கத்தில் அவர், “அவை மங்களகரமாக இருக்கட்டும்” என்று முதலில் சொன்னார். அவருடைய தவறான எண்ணத்தைப் போக்கவே நான் இப்படிச் செய்தேன்” என்றார் கவிராயர்.

உடனே விசுவநாத பாரதியார் மாம்பழச் சிங்கக் கவிராயரின் காலில் விழுந்து, “கவிராயரே, நான் செய்த தவறை மன்னித்தருள வேண்டும்” என்று மன்னிப்பு கோரினார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p343.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License