முதல் தொழில்
ஒரு பாதிரியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக்கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
“மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழைமையானது!” என்றார் பாதிரியார்.
“சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழைமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்பு உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!” என்றார் டாக்டர்.
“சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழைமையான தொழில்” என்றார் அரசியல்வாதி.
“எப்படி?”
“கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக்கலவரத்தை என்னைப்போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழைமையானது” என்றார் அரசியல்வாதி.
- ஒஷோ கதைகள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.