இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

டிமீட்டர் நிலவள தேவதையானது எப்படி?

கிரேக்க நாட்டில் 'டிமீட்டர்' என்ற தேவதை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளை மிகவும் அன்புடன் வளர்த்துப் பாதுகாத்து வந்தாள் டிமீட்டர். வயதுக்கு வந்த பெண் அங்கும் இங்கும் ஓடியாடித் திரிந்தாள். அப்போது இளமை எழிலுடன் இருந்த 'பெர்சிபோன்' என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணைப் பாதாளத்தில் இருந்த மன்னன் பார்த்தான். அவள் அழகிலும் துடிப்பிலும் மயங்கியவன் அவள் மீது காதல் கொண்டான். ஒரு நாள் அவள் ஏமாந்து இருந்த நேரத்தில் அவளைப் பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போய் அவளை மணந்து கொண்டான்.

அவளைப் பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போனபோது அவள் கதறினாள். அவள் கதறலைக் கேட்ட அவள் தாயாரான 'டிமீட்டர்' அவளை காப்பாற்ற ஓடின போது அவள் மறைந்து விட்டாள். ஆகவே தன்னுடைய பெண்ணைத் தேடிக் கொண்டு கையில் ஒரு விளக்குடன் இரவு பகல் எனப் பார்க்காமல் 'டிமீட்டர்' அனைத்து உலகிலும் செல்லத் துவங்கினாள்.

சுமார் ஒன்பது நாட்களாக பசி, தூக்கம், துணியை மாற்றிக் கொள்ளுதல் என அனைத்தையும் துறந்தவள் தனது மகளைத் தேடி அலைந்தாள். அப்போது அவள் அலைந்து திரிந்து கொண்டு இருந்ததைக் கண்ட கடல் தேவன் அவளை வஞ்சகமாக அடைந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க அவள் குதிரையின் உருவம் எடுக்க கடல் தேவனும் ஆண் குதிரையின் வடிவம் எடுத்து அவளை பின் தொடரலானான். அதில் வெற்றியும் பெற்றான். அது முதல் அவளை தன் வசம் வைத்துக் கொண்டாலும் 'டிமீட்டர்' தனது மகளைத் தேடுவதை நிறுத்தவில்லை.

அந்த நேரங்களில் அவள் பல இடங்களிலும் பல அற்புதங்களை செய்து கொண்டு போனாள். பேச முடியாமல் முடங்கிக் கிடந்த குழந்தையை தொட்டு அவளை நல்ல நிலைக்கு ஆளாக்கினார். தன்னைக் கேலி செய்தவனைப் பல்லியாக மாற்றினாள். அவளை அனைவரும் தெய்வப் பிறவியாகவே பார்க்கலாயினர்.

இப்படியாக அலைந்து கொண்டு இருந்தவளை ஒரு நாள் வழியில் சந்தித்த ஒரு தேவதை வானத்திலே உள்ள சூரிய பகவான், யார் எங்கு போனார்கள் என்பதை அறிந்து இருக்க முடியும் என்பதால் சூரிய பகவானின் உதவியை நாடி அவளுடைய மகள் எங்கு சென்று இருக்க முடியும் என்பதைக் கண்டு பிடிக்குமாறு அவளை அறிவுறுத்தினாள்.



அதைக் கேட்டவள் சிறிதும் தாமதிக்காமல் வானத்தில் பறந்து சென்று சூரிய பகவானிடம் தன்னுடைய மகளைப் பற்றிக் கேட்க அவரும் அவளிடம் நடந்த உண்மைகளைக் கூறி அவளுடைய மகள் பாதாளத்துக்குள் இருக்கின்றாள் என்ற சேதியைக் கூறினார். அதற்கு மேலும் அவளுடைய கணவனே அந்த பாதாள மன்னனுக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார். கோபமுற்ற 'டிமிட்டர்' தன்னுடைய மகள் தனக்கு கிடைக்காதவரை இந்த பூமியில் விளையும் அனைத்து உணவுப் பொருட்களும் அழிய வேண்டும் என சாபமிட பயிர்கள் வாடி வதங்கின. அவள் பூமியின் தேவதையாகவும் இருந்ததினால் அனைத்துப் பயிர்களையும் வாட விட்டாள். நாட்டில் பஞ்சம் ஏற்படத் துவங்கியது.

அதனால் நாடு திகிலடைய அவளுடைய கணவன் ஓடோடி வந்து அவளிடம் தனது முட்டாள்தனத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பயிர்கள் விளைய உதவுமாறு கேட்டான். ஆனால் அவளோ முதலில் தனது மகளை கண்டவுடன்தான் அவற்றைச் சரி செய்வேன் என பிடிவாதமாக மறுத்து விட்டதால் உடனே தன்னுடைய மகளை மேல் உலகிற்கு அனுப்பி வைக்குமாறு பாதாள மன்னனுக்கு செய்தி அனுப்பினான்.

ஆனால் பாதாளத்துக்குள் சென்று திருமணம் செய்து கொண்டு பாதாளவாசியாக 'பெர்சிபோன்' மாறி விட்டதினால் அவளால் பூமியில் சென்று வாழ முடியாது. பூமிக்குச் சென்றால் சில மாதங்களே வாழ முடியும். அதுவும் வேறு ரூபத்தில்தான் இருக்க முடியும். அதன் பின் அவள் பூமியில் தானாக இழுக்கப்பட்டு விடுவாள். அப்படி ஒரு ஏற்பாட்டை அவளுடைய கணவன் செய்து விட்டான். அவளுடைய கணவன் அவளுக்கு மாதுளம்பழ விதைகளை தந்து அதை சாப்பிடுமாறு கூறினான். அதை உண்டால் சில காலம் அவளால் மேல் உலகில் இருக்க முடியும் என்று கூறி அவளை அனுப்பினான்.

அவளும் வேறு வழி இன்றி ஒரு செடியின் உருவத்தில் பூமிக்கு வந்து தனது தாயாரை சந்தித்தாள். 'டிமேடேருக்கு மகளை சந்தித்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவளால் அவளுடைய சுய ரூபத்தில் இருக்க முடியாது, நடந்து விட்டவை மாற்ற முடியாதவை என்பதை உணர்ந்த 'டிமீட்டர்' வேறு வழி இன்றி வருடத்துக்கு நான்கு மாதமாகவாவது தன்னுடைய மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதினால் அவளை உண்ணும் தானியமாக வந்து பூமிக்கு மேல் தங்கி இருக்குமாறு கூறினாள்.



'டிமெடேரின்' சாபத்தினால் அழிந்துவிட்ட மற்ற உணவு தானியங்களுக்கு பதிலாக 'பெர்சிபோன்' உணவு தானியமாகத் தனது பாதாள மக்களுடன் பூமிக்கு வந்து தங்கிச் சென்றாள். போகும் முன் அந்தத் தானிய உருவை இழந்து விட்டுச் செல்ல வேண்டி இருந்தது. இப்படியாக உருவானதே அரிசி, கோதுமை போன்ற தானியங்கள். அவளுடன் வரும் அவள் பரிவாரங்கள் பூமியில் தங்கி தமது உடல்களில் இருந்து பூவை வெளிப்படுத்தி அதை தானியமாக்கி பூமியில் விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அந்தப் பூவும் காய்களுமே அரிசி நெல் மற்றும் கோதுமை போன்ற பல உணவு தானியம் ஆயிற்று.

இப்படியாக தான் சாபமிட்டு அழித்த உணவுச் செடிகளுக்குப் பதிலாக அரிசி மற்றும் கோதுமை தானியத்தை பூமியில் தோன்றக் காரணம் ஆனவளே 'டிமீட்டர்'. அதனால் பூமியில் உள்ள அனைவரும் 'டிமேடேரை' உணவு தானியம் தரும் தாயாகப் போற்றி வணங்கினார்கள். அவளும் அந்தப் பயிர்களை எப்படிக் காப்பது, எப்படி வளர்ப்பது, எப்படி அவற்றின் இனப் பெருக்கத்தைச் செய்வது போன்ற அனைத்தையும் பூமியில் இருந்தவர்களுக்குக் கற்றுத் தந்தாள். அந்தப் பயிர்களைக் காத்து வந்தாள். இப்படியாகத்தான் 'டிமிட்டர்' நிலவளத்தைக் காக்கும் தேவியாக மாறினாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p518.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License