துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு இளைஞன் குறுக்கிட்டு, “ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.
ஆற்றிலிருந்து எழுந்தவர், "ஏன்?" என்றார் துறவி.
"நான் கடவுளை அறிய விரும்புகிறேன்" என்றான்.
சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் அழுத்தினார்.
சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான்.
கடைசியாகத் துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார்.
வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான்.
துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப்பட்டது?” என்றார்.
”காற்று” என்றான் இளைஞன்.
”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.