ராமாயண சொற்பொழிவில் கும்பகர்ணன்கள்
ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் யுத்தம் நடந்தது.
அப்பொழுது கும்பகர்ணன் ராமரைப் பார்த்து, "ராமா இந்தப் போரில் நான் இறப்பதும், நீ வெற்றி பெறுவதும் உறுதி. அப்படியிருக்கும் போது நமக்குப் பின்னால் வரக்கூடிய சந்ததியினர் உன்னைப் பற்றியும் ராவணனைப் பற்றியும் பெருமையாகப் பேசுவார்களே தவிர என்னைப் பற்றி நினைக்கக் கூட வகையில்லாமல் போய்விடும்." என்று சொல்லி வருந்தினான்.
அதற்கு," வருந்தாதே கும்பகர்ணா எங்களைப் பற்றிப் பேசும் இடங்களிலெல்லாம் உன்னைப் பற்றியும் பத்து பேராவது நினைக்கும்படி செய்து விடுகிறேன்." என்றார் ராமர்.
அதன் விளைவுதான் ராமாயணம் நடக்கும் இடங்களிலெல்லாம் குறைந்தது பத்து பேராவது கும்பகர்ணனை நினைத்து(தூங்கி)க் கொண்டிருக்கிறார்கள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.