ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டிக் கொன்றுவிட்டது.
அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது, அதை நடத்தி வைத்தப் புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை கவனித்தார். துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிற போது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலையசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கி வந்து ஏதோ சொல்கிற போது "இல்லை” என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
எனவே இறுதி சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினீர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினீர்களே, ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, “பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொல்வார்கள். எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம். என்பது போன்று சொல்வார்கள். நான் அதற்கு ஆமாம் என்று தலையசைத்தேன்” என்றார்.
“ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்?” என்று கேட்டார் அந்தப் புரோகிதர்.
“அவர்கள் அந்தக் காளை மாட்டை எனக்கு விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள், நான் இல்லை என்று சொன்னேன்” என்றார்.