ஆசிரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டுத் திரும்புவதைத் தலைமை குரு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஆசிரமத்தை அடைந்ததும் ஐந்து பேரையும் அழைத்தார்.
அவர் ஐந்து பேர்களையும் பார்த்து, “நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள்?” என்று கேட்டார்.
“சுவாமி, அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது” என்றான் முதலாமவன்.
அவனைத் தட்டிகொடுத்த அவர், ''சீடனே, நீ பெரிய அறிவாளி , நீ வயதான காலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய்” என்றார் குரு.
இரண்டாவது சீடன், “சுவாமி, நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது’ என்றான்.
குரு அவனை அருகில் அழைத்து, “சீடனே, உன் கண்கள் நன்கு திறந்திருக்கின்றன. நீ இந்த உலகை அருமையாக ரசிக்கிறாய்” என்றார்.
மூன்றாவது சீடன், “சுவாமி, நான் பயணம் செய்யும் போது கூட என்னால் மந்திரங்களைச் சொல்ல முடிகிறது” என்றான்.
குரு அவனைப் பார்த்து, ”சீடனே, உன் அறிவுக்கூர்மை என்னை வியக்க வைக்கிறது” என்று இரண்டு கைகளையும் தட்டிப் பாராட்டினார்.
நான்காவது சீடன், “சுவாமி, நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன்” என்றான்.
குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி, “நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். விரைவில் ஞானமடைவாய்” என்றார்.
ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின், “சுவாமி, என் சைக்கிளை ஒட்டுவதற்காக, என் சைக்கிளை ஓட்டுகிறேன்! ” என்றான் .
குரு அவன் காலில் விழுந்து ''சுவாமி, என்னை மன்னியுங்கள், நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது, நான்தான் உங்கள் சீடன்” என்றார்.