ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்துத் தக்காளி பயிரிட்டு வந்தான்.
தக்காளி அமோகமாக விளையும்... அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்... அவற்றை அவன், தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் உணவாகப் போட்டு வந்தான்.
அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன், அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.
அதைப் பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான். ஊரார்... அவனிடம், “ஏன் கவலையாக இருக்கிறாய்...? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?” என்றனர்.
;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை நான் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன். இப்போது எல்லாத் தக்காளிகளும் நன்றாக இருப்பதால்... நான் அவற்றிற்குப் போடச் சொத்தைத் தக்காளிக்கு எங்கு போவேன்...?” என்றான் மிகவும் கவலையுடன்...
கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும், புத்தியைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு... ஆண்டவன் அருள் கிடைத்தாலும் எந்தப் பயனுமில்லை...!