ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது.
இலையுதிர் காலம் வந்தது...
மரத்தில் இருந்த இலைகள் பழுத்துக் கீழே விழத் தொடங்கின. அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது.
அந்த இலை பள்ளத்தைப் பார்த்து, “என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள், இல்லாவிடில்... அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் துன்பப்படுவேன்” என்றது.
அந்தப் பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம் "காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.
பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.
மற்றுமொரு நாள்.
வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது. மழை வேறு பெய்ய ஆரம்பித்தது.
உடனே பள்ளம் இலையைப் பார்த்து, “என்னை மூடிக்கொள். இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும், மண் சரிந்து என்னை நீக்கிவிடும்” என்று கெஞ்சியது.
அதற்கு அந்தப் பள்ளம் ஒன்றும் பேசாமல் இருந்தது.
உடனே அந்த இலை, “அன்று என் சகோதர இலை, உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை... அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது. ஆனால் நீ உதவி கேட்கும்போது, நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. என்று சொல்லிவிட்டு, அந்தப் பள்ளத்தின் மேல், அதை முழுவதுமாக மறைத்தது இலை.
அன்று இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்ய, பள்ளமும் காப்பாற்றப்பட்டது.
பின் இலை பள்ளத்தைப் பார்த்து, “இனியும் உதவி என நம்மை நாடி வருபவருக்கு, நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்” என்றது.!