ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.
அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது. அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளைக் கழித்து வந்தான்.
ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானை தவறிக் கீழே விழுந்து, உடைந்தது. அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.
இதைக் கண்ட மூடன், மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.
இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதைத் தருகிறேன்' என்றார்.
சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா... என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது. அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது. ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.
அவனது முட்டாள் தனத்தை நினைத்து சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்து விட்டுச் சென்றார்.
அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்தான்.