ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்... கடலில் மூழ்கியது. அதிலிருந்த அனைவரும் மடிந்தனர். கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து, நீந்தியபடியே ஆள் இல்லாத தீவு ஒன்றிற்கு வந்தான்.
தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன், அந்தத் தீவில் கிடைத்த ஓலை, குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக் கொண்டான்.
பின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக, உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.
திரும்பி வந்து பார்த்தபோது, அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிந்திருந்தது.
அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன், 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்.. என்னை யாருமில்லா தீவில் கொண்டு வந்து சேர்த்தாய். உண்ண உணவில்லை. நான் தங்கியிருக்கக் கட்டிய குடிசையையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே” எனக் கத்தினான்
அப்போது... அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.
“நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது” என அவன் அவர்களிடம் கேட்டான்.
அவர்கள் சொன்னார்கள், “யாருமில்லாத் தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்... உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்” என்றனர்.
கடவுள் எது செய்தாலும் அது நல்லதுக்காகத்தான் இருக்கும் என்பதை அவன் உணர்ந்தான்.