அது ஒரு சிறு கிராமம்.
அந்தக் கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது. மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரு இடத்தை தீர்மானித்து, அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.
இடம் சரியில்லை என நினைத்து, வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர். அங்கும் அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
அந்த இடமும் சரியில்லை, என மூன்றாவதாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர். தண்ணீர் இல்லை.
மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியிருந்தனர்.
அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால், முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.
மனதில் உறுதியுடன் செய்யும் செயலைத் தொடர்ந்து செய்திட வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.