அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.
அவள் அந்தச் செடியினை ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள்.
பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப்பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் வந்து எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா...? அதைப் பார்ப்பதற்கு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும்… என்பது மட்டும் உண்மை.
பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை...!