ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
உடனே பார்வதி சிவனிடம்,”இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?”என்று கேட்டார்.
சிவன்,”கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?”என்று கொக்கிடம் கேட்டார்.
“சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?”என்று கேட்டது கொக்கு.
“கிடைக்காது” என்றார் சிவன்.
“அப்போ, சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ... அதுவே எனக்கு சொர்க்கம்” என்றது கொக்கு.
உண்மையில், எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ, அதுவே நமக்கு சொர்க்கம்.