இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

வெண்குஷ்டம் போக என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஊரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த இரு சகோதரர்களுக்கும் திருமணம் ஆயிருந்தும், மகவு இல்லை! மூத்தவர் தன் நிலத்தையெல்லாம் பார்த்துப் பராமரிக்கும் பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு வாணிபம் செய்ய வெளிநாடு புறப்பட்டார். அண்ணனின் மனைவி ஒரு பக்திமான். ஊரில் இந்த இரு குடும்பத்தைப் பற்றியும் நல்ல பெயர். தம்பியும் பொறுப்புடன் அண்ணனின் நிலத்தையும், மற்றும் ஆடு மாடுகளையும் கவனித்து வந்து கொண்டிருந்தார்.

சிறிது நாட்கள் கழித்து, தம்பி தன் உடலில் தேமல் போல வந்திருப்பது கண்டு, ஊர் மருத்துவரைப் போய் பார்த்தார். மருத்துவர் வந்திருப்பது வெண் குஷ்டம் என்றும் மருந்தால் குணப்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார்.

இதைக்கேட்ட தம்பியும் மிகவும் மனமுடைந்து, ஊரிலுள்ள சாமியாரைப் போய்ப் பார்த்தார். அந்த சாமியார் நடந்ததையெல்லாம் கேட்டு, இந்தப் பிணி வந்ததற்கு முன் வினையே காரணம் என்றும், இதைப் போக்க வழி இல்லை என்றும் சொன்னார். மனம் வருந்திய தம்பியும், தான தருமங்கள் செய்து மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து வரும் தனக்கு இதைப்போலொரு கஷ்டம் ஏன் வந்தது என அழுது புலம்பினார். இதைப் பார்த்த சாமியார் மனம் இரங்கி, தான் சொல்வது போல செய்தால் இந்தப் பிணி போக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனால் மறு பேச்சு பேசாமல் தான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தம்பியும் பிணி போவதற்கு எதுவும் செய்யத் தயார் என்றார். சாமியார் தம்பியிடம், தினமும் வயல் வேலைகளையெல்லாம் முடித்த பின், குளித்துவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்று, அண்ணியிடம் பாகவத விளக்கப் பாடம் பெறுமாறு கூறினார். பாகவத விளக்கம் பெற பக்தியுடன் ஒரு சீடன் போல அமர்ந்து கேட்க வேண்டும் என்றும், மற்றும் இது ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை தொடர வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, இந்தப் பாடம் தனியாக நடக்க வேண்டும் என்றும், இதைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் கூறினார்.

தம்பியும் இந்த வினோதமான கட்டளைகளைப் பற்றி யோசித்தாலும் நோய் போக வேண்டும் என்பதால், நேரே அண்ணியிடம் சென்று நடந்ததை விவரித்தார். அண்ணியும் ஊர் சாமியார் சொன்னால் அது நல்லதிற்காகத்தான் இருக்கும் என்று சொல்லி, அன்றிலிருந்தே பாடத்தை ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார்.

இந்த பாகவதப் பாடம் தொடங்கி தினமும் நடக்க ஆரம்பித்தது. தம்பியின் உடலில் இருந்த தேமல் பெரிதாக ஆரம்பித்தது; ஆனாலும் அவர் பாடம் கேட்பதை நிறுத்தவில்லை. ஊரில் இது பற்றி முதலில் அரசல் புரசலாக பேச ஆரம்பித்தனர். எதற்காக அண்ணன் வீட்டிற்கு தினம் மாலை செல்ல வேண்டும், நள்ளிரவு வரை இருக்க வேண்டும் எனப் பேச ஆரம்பித்தனர். வேறு யாரும் இல்லாதது, இதைப் பற்றி கேள்வி கேட்டால் தம்பியோ, அண்ணியோ பதில் சொல்லாதது ஊர் மக்களின் வாயை மேலும் வளர்த்தது. தம்பியின் காதிலே இந்த பேச்செல்லம் விழ ஆரம்பித்ததும், அவர் சாமியாரைத் தேடிப் போனார். சாமியாரும் தம்பி சொன்னதையெலாம் கேட்டுவிட்டு, முன் போலவே பாடத்தைத் தொடருமாரு சொன்னார். தம்பியும் மிக மனக் கஷ்டத்துடன் தினமும் பாகவத பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

சில நாள் கழித்து அண்ணன் ஊருக்குத் திரும்பி வந்தார். அப்போது தம்பி வயலில் இருந்ததால் அவருக்கு அண்ணன் வந்த செய்தி தெரியாது. அண்ணன் வந்த செய்தி கேட்ட உடனேயே, ஊரில் இருந்த சிலர் ஒன்று சேர்ந்து அவரைப் போய் பார்த்தனர். அவர் மனைவியைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், தவறாக நிறைய வார்த்தைகள் பேசி, 'இருவரும் தினமும் நள்ளிரவு வரை தனியாக இருந்தது ஏன்' என விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அண்ணனும், தன் மனைவியைக் கூப்பிட்டுக் கேட்க, அவர் தம்பியைக் கேட்குமாறு கூறிவிட்டார். அண்ணனும், தம்பி வந்தவுடன் அவரை கேட்க, அவர் அண்ணனையும், அண்ணியையும், ஊர் சாமியாரிடம் அழைத்துச் சென்றார்.



சாமியாரை வணங்கி ஊர் மக்கள் அண்ணனிடம் பேசியதையும், அண்ணன் தன்னை விசாரித்ததையும் கூறி, 'தாங்கள் தான் இதை விளக்க வேண்டும்' என்று கேட்டார். சாமியார் தம்பியைப் பார்த்து, 'முதலில் உன் சட்டையை எடுத்துவிட்டுப் பார் - பிறகு புரியும்’ என்றார். தம்பியின் உடலில் இருந்த தேமல் காணவில்லை. உடனே தம்பி சாமியாரை விழுந்து வணங்கினார்!

சாமியார் ஊருக்கு விளக்கினார். 'ஊழ்வினைப் பயனால் இவருக்கு வெண்குஷ்டம் வந்து விட்டது. அதைப் போக்க எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரிந்தது. இவருடைய நோயை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதானால் இப்படியொரு வினோதமான வழி சொன்னேன். ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி தவறாகச் சொன்னால் அது பெரும் பாவம். பிழையாக தூற்றப்பட்டவரின் பாபங்கள், தூற்றுபவருக்கே போய் சேரும். இந்த ஊரில் இவர் பாகவதம் கேட்பது பற்றி தெரியாமல் யார் யாரெல்லாம் தவறாகப் பேசினார்களோ, அவர்கள் பேச்சுக்குத் தகுந்தபடி, இந்த நோய் இவரிடமிருந்து மற்றவர்களுக்கு போய் விட்டது. உங்கள் சட்டைகளை எடுத்து விட்டுப் பாருங்கள்' எனக் கூற, மக்கள் விழித்து பின் ஒவ்வொருவராக சட்டையைக் கழற்ற ஆரம்பித்தனர்.

ஊரில் யாரெல்லாம் தவறாக பழி பேசினரோ, அவர்கள் உடலில் எல்லாம் சிறு தேமல் இருந்தது. ஊர் மக்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கி தலை குனிந்து நின்றார்கள். அண்ணனும், தம்பியும், சாமியாரை விழுந்து வணங்கினர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p671.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License