ஒரு நாள்...
எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து, "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள்" என்று சொன்னான்.
அதைக் கேட்ட மனிதன், “எமனே, நான் உன்னுடன் வர தயாராக இல்லை” என்றான்.
உடனே எமதர்மன், "மனிதனே, இன்று உன்னுடைய பெயர்தான் என் பட்டியலின் முதலில் உள்ளது..." என்றான்.
அந்த மனிதன், "சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள், நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றான்.
எமதர்மனும் அதற்குச் சம்மதித்தான்.
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த காப்பியைக் கொடுத்தான்.
அதைக் குடித்தவுடன் எமதர்மன் நன்றாகத் தூங்கி விட்டான்.
மனிதன் உடனே எமதர்மன் வைத்திருந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்து விட்டு, அந்தப் பெயரைக் கடைசியாக எழுதி வைத்தான்.
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம், " மனிதனே, நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய். அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன். நான் என்னிடமிருக்கும் பட்டியலில் மேலிருந்து இல்லாமல், பட்டியலின் கீழே இருந்து உயிர்களை எடுக்கிறேன்” என்றான்.
அந்த மனிதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...!