இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

விறகு வெட்டி ராசாவான கதை


முன்னொரு காலத்தில் ஏழை விறகு வெட்டி ஒருவன் இருந்தான். காலையில் காட்டுக்கு விறகு வெட்டப் போவான். மாலையில் வெட்டிய விறகை விற்கப் பக்கத்து நகரத்துக்குப் போவான். விறகை விற்றுக் கிடைக்கும் பணத்தில் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான்.

அவன் மனைவியோ "ருசியா" சமைச்சுச் சாப்பிட வாங்கி வருவதில்லை என்று சண்டை போடுவாள். விறகு விற்ற காசுக்கு இவ்வளவுதான் வாங்க முடிந்தது என்பான். சுள்ளி விறகா வெட்டி வித்தா இதுதான் கிடைக்கும். அடுத்த வீட்டு வீரன் பாருங்க எவ்வளவு சம்பாதிச்சுட்டு வருகிறார். நீங்களும் இருக்கீங்களே என்று திட்டுவாள்.

"வீரன் நாலுபேரை ஏமாத்திச் சம்பாதிக்கிறான். இன்னைக்கு நல்லா இருக்கலாம். ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் வீரன் ஜெயிலுக்குத்தான் போகணும். நமக்கு வயிறாரச் சாப்பாடு கிடைக்குது. அதவச்சு சந்தோசமா இருக்கக் கத்துக்க” என்பான் விறகு வெட்டி.

"பசியாரச் சாப்பிட்டால் போதுமா? நாம நாலு காசு சம்பாதிச்சு வசதியா வாழ வேண்டாமா? காட்டுல பெரியமரமாப் பாத்து வெட்டி வித்தா நமக்கும் நாலு காசு சேரும்" என்பாள்.

"ஏதோ, சுள்ளி விறகு வெட்டி தினமும் வயித்தைக் கழுவுறதே அந்தப் பெரிய மரங்களால் தான்! உன் பேச்சைக்கேட்டுப் பெரிய மரமா வெட்டி வித்தாக் கொஞ்ச நாளைக்கு நாம நல்லா இருக்கலாம். அப்புறமா, பெரிய மரங்களும் இருக்காது; சுள்ளி வெறகுக்கும் வழி இருக்காது. நாம பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்" என்பான் விறகு வெட்டி.

இதைக் கேட்டதும், " நாம உருப்புடாம இருக்கிறதுக்குக் காரணமே இதுதான் என்று அழத் தொடங்கி விடுவாள். விறகுவெட்டி மனைவியைச் சமாதானப்படுத்துவான்.

"சரி சரி.. .இனிமே பெரிய மரமா பாத்து வெட்டுறேன்“ என்று சொல்வான். அப்புறம் வழக்கம் போல் சுள்ளிவிறகு வெட்டிப் போய் விற்று வருவான். மனைவி சண்டை போடுவதும் இவன் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடப்பதுதான்.

அன்று விறகுவெட்டி நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்தும் போதுமான விறகு கிடைக்கவில்லை. மிகவும்களைத்துப் போய் வீடு திரும்பலாம் என நினைத்தான்.

அப்போது ஒரு பெரிய மரம் ஒன்றைப் பார்த்தான். சரி. இன்றாவது மனைவி சொன்ன மாதிரி இந்த மரத்தை வெட்டி விற்போம். மீன், அது இதுன்னு வாங்கிட்டுப் போவோம் என்று நினைத்துக் கொண்டான்.

மரத்தை வெட்ட வேண்டாம்; அதன் கிளைகளை வெட்டினால் போதும் என்று மரத்தில் ஏறி ஒரு கிளையை வெட்ட‌ கோடாலியை ஓங்கினான்.

அப்போது "வெட்டாதே! " என்ற சப்தம் கேட்டது.

விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இல்லை. மீண்டும் வெட்டக் கோடாலியை ஓங்கினான். மீண்டும், "வெட்டாதே ! நில்! என்று சத்தம் வந்தது.

விறகுவெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது, "நான் தான் மரம் பேசுகிறேன். என்னை நீ வெட்டாமல் விட்டுவிடு, நான் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றது மரம்.

மரம் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான், விறகுவெட்டி. சரி, இன்று பட்டினி தான் என்று சோர்ந்தும் போனான்.

"கவலைப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன்..." என்று மீண்டும் மரம் பேசியது.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மனைவிக்குத்தான் வசதியா வாழணும்னு ஆசை! எனக்கு எதுவும் வேண்டாம். என் மனைவி நச்சரிப்பு இல்லாம இருந்தா அதுவே போதும்” என்றான் விறகு வெட்டி.

“உன் நல்ல மனசு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ விரும்பியது போல எல்லாம் நடக்கும். நீ, வீட்டுக்குப் போய்ப்பார்!” என்றது மரம்.

விறகு வெட்டி வீட்டிற்குப் போனான். அவன் வீடு இருந்த இடத்தில் பெரிய பங்களா இருந்தது. வீட்டுக்கு வெளியே தயங்கி நின்றான். அப்போது அவன் மனைவி கழுத்து நிறைய நகைகளுடன், பட்டுச் சேலை உடுத்தி வெளியே வந்தாள்.



மரத்தின் மகிமையை எண்ணி வியந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், அவனும் பட்டு வேட்டி, மோதிரம் என்று விறகு வெட்டி பணக்காரனாக மாறிப் போனான்.

நடந்ததை மனைவியிடம்சொன்னான். நல்லவேளை, இதையாவது புத்திசாலித்தனமாக் கேட்டீங்களே என்று மனைவி சொல்லிச் சந்தோசப்பட்டாள்.

கொஞ்ச நாள் ஆனது. விறகுவெட்டியின் மனைவிக்கு இந்த வாழ்க்கையும் சலித்துப் போனது.

“இந்த ஊர்ல நம்மைப் போல் பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாப் பணக்காரர்களும் மதிக்கிற மாதிரி இந்த ஊர் ஜமீன்தாரா ஆகணும். அப்பத்தான் நம்மை எல்லாரும் மதிப்பாங்க. நீங்க அந்த மரத்திடம் போய்ச் சொல்லி ஜமீன்தாரா ஆக்கச் சொல்லுங்க” என்றாள்.

விறகுவெட்டி மறுத்தான். ஆனால் மனைவியின் பிடிவாதம் வேறுவழியில்லாமல் மரத்திடம் போனான்.

மரம் முன்பாக விறகுவெட்டி போனதுமே, “என்ன ஜமீன்தாராகணுமா?” என்று கேட்டது.

அது என் மனைவியோட ஆசை, என்றான்.

“சரி. வீட்டிற்கு போ” என்றது மரம்.

விறகுவெட்டி வீட்டிற்குத் திரும்பினான். அந்த நாட்டு ராஜா, இவனை ஜமீன்தாராக்கிய செய்தி காத்திருந்தது.

கொஞ்ச நாள் சென்ற பின் ஜமீன்தார் வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டிப் போக இந்த நாட்டுக்கே ராஜா ஆக்கிட மரத்திடம் இன்றே போய்க் கேளுங்கள் என்றாள் அவன் மனைவி.

அவனும், "வேண்டாம், இந்த வாழ்க்கையில்என்ன குறை கண்டாய்?" என்று சொல்லிப் பார்த்தான். அவளின் பிடிவாதம், மீண்டும் மரத்தின் முன் வந்து நின்றான்.

"ராஜாவாக்கிப் பார்க்க ஆசை வந்துவிட்டதா? உன் மனைவிக்கு" என்று கேட்டது மரம்.

உன் மனைவியின் ஆசைப்படியே “நீ ராஜா ஆவாய்! ஆனால் ஒரு நிபந்தனை. உன் மனைவிக்கு இந்த ராஜா வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டி என்றைக்காவது விறகு வெட்டி வாழ்க்கையே மேல் என்று எப்போது எண்ணினாலும் நீ மறுபடியும் விறகு வெட்டியாகிவிடுவாய்” என்று சொல்லிஅனுப்பியது மரம்.

வீட்டுக்கு வந்தான். அரண்மனையின் பட்டத்து யானை மாலையுடன் வீட்டு முன் நின்றது.

விறகுவெட்டி இப்போது அந்த நாட்டு ராஜா!

ராஜாவாகப் பொறுப்பு ஏற்றதும் ராஜாங்க அலுவல் அதிகமாக இருந்தது.

அதனால் விறகுவெட்டி ராஜா தனது மனைவியிடம்பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. பகலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எந்நேரமும் ஓய்வின்றி இருந்தான்.

இரவில் நகர்வலம், ஒற்றர்களுடன், படைத்தலைவர்களுடன் ஆலோசனை; இப்படியாக ராஜா இரவு எந்த நேரத்தில் வந்து படுப்பார் என்றே தெரியாது.

காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பு நீராடி கோட்டைக் கொத்தளங்களைப் பார்வையிடப் போய்விடுவார் ராஜா.

இதனால் கொஞ்ச நாளில் ராஜ வாழ்க்கையும் விறகுவெட்டியின் மனைவிக்கு வெறுத்துப் போகப் பேசாமல், "விறகுவெட்டி குடும்ப வாழ்க்கையே மேல்" என்று வாய்விட்டே சொன்னாள்.



அன்று எதிரி நாட்டு மன்னன் படைஎடுத்து வந்து தேசத்தைக் கைப்பற்றினான்.

விறகுவெட்டி தலை தப்பினால் போதும் என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன்பு வசித்த ஊருக்கே ஓடி வந்துவிட்டான்.

இப்போது, விறகுவெட்டி காட்டுக்குப் போய் முன்பு போல் விறகு வெட்டி சந்தோசமாக வாழ்க்கை நடத்தினான். அவன் மனைவியும் பேராசையை விட்டுவிட்டுக் கிடைப்பதை வைத்துச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தப் பழகிக் கொண்டாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p765.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License