ஒரு நிறுவனம்... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது,
அதன்படி_ அந்நிறுவனத்திற்கு நிறைய நபர்கள் நேர்காணலுக்காக வந்திருந்தனர்.
அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்.
அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது.
அப்பொழுது அந்த நிறுவன மேலாளர், “இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். பின்னர், தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலை வழங்கப்படும்” என்றார்.
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாகப் பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின்... அந்த மேலாளர் அங்கு தேர்வு எழுதிய அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார்.
விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாகக் கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும்தான் பதில் எழுத முடிந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை” என்றனர்.
அதில் இருவர் மட்டும், “எந்தப் பதிலும் எழுதவில்லை” என்று சொல்லி வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.
''விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும்தான் இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம்" என்றார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.
“வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுக்கிறீர்கள்”
அதற்கு அந்த மேலாளர், "எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியைப் படித்துப் பாருங்கள்" என்று சொன்னார்.
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்குச் சென்றனர்.
அந்த வினாத்தாளில் பத்தாவதாக இருந்த கேள்வி இது தான்...
10. மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.
இங்கு நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், என்ன தெரியுமா?
எந்தவொரு தேர்வாக இருந்தாலும், சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டுமென்பதுதான்.