மன்னனான அம்பரீஷன் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறைவன் விஷ்ணுவை நினைத்து விரதமிருந்து வந்தான். அந்நாட்களில் தனது விரதம் முடிந்து, விஷ்ணுவுக்கு வழிபாட்டுப் பாடல்கள் பாடிப் போற்றிய பின் ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
ஒருநாள், துர்வாச முனிவர் அவனது விரதம் முடியும் வேளையில் அங்கு வந்தார். அவரை வரவேற்ற அம்பரீஷன், அவரைத் தானளிக்கும் உணவை ஏற்கும்படி வேண்டினான்.
அவர் அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்து அவனளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிச் சென்றார்.
அவர் துவாதசி முடியும் வரை திரும்பி வரவில்லை. தன் விரதத்தை முடிக்க வேண்டிய நிலையில், அம்பரீஷன் சிறிது நீர் பருகித் தன் விரதத்தை முடித்தான்.
இதனையறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தன் தவ வலிமையால் ஒரு அரக்கனை உருவாக்கி, அம்பரீஷனைக் கொல்ல ஏவினார். அம்பரீஷன் அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றும்படி இறைவன் விஷ்ணுவை வேண்ட, அவர் தன் சக்கரத்தை அனுப்பி அந்த அரக்கனைக் கொன்றார்.
அதன் பிறகே, துர்வாச முனிவருக்கு அம்பரீஷனின் சிறப்பு தெரிந்தது. அவரும் அவனை வாழ்த்திச் சென்றார்.