குருவிடம் சென்ற சீடன் ஒருவன், ''விதி என்றால் என்ன? பகுத்தறிவு என்றால் என்ன?'' என்று கேட்டான்.
குரு சீடனைப் பார்த்து, ''உன் வலது காலைத் தூக்கு!'' என்றார்.
சீடன் வலது காலைத் தூக்கியபடி நின்றான்.
''சரி. இப்போது நீ தூக்கிய வலது காலைக் கீழே இறக்காமல் இடது காலையும் தூக்கு!'' என்றார் குரு.
''அது எப்படி முடியும்?'' என்று கேட்டான் சீடன்.
அதற்குக் குரு, ''உன்னால் ஒரு காலை மட்டும் தூக்க முடிந்ததே... இதுதான் பகுத்தறிவு. இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க முடியாத நிலை இருக்கிறதே... இது தான் விதி!'' என்று விளக்கம் சொன்னார்.