இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

இல்லறமா? துறவறமா? எது உயர்ந்தது?


ஒரு அரசன், தன் நாட்டுக்கு வரும் துறவிகளிடம் எல்லாம், உலகில் சிறந்தது துறவறமா? இல்லறமா? என்று கேட்பது வழக்கம். யாருடைய பதிலும் அவனுக்கு திருப்தி தரவில்லை.

ஒருநாள் அரசனைத் தேடி வயது முதிர்ந்த அனுபவத் துறவி ஒருவர் வந்தார். அவரிடமும் அரசன் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அந்த துறவி, "அரசே! நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வது போல் சில நாட்கள் வாழ்ந்தால் அதற்கு சரியான பதில் கிடைக்கும்" என்றார். அரசனும் அதை ஏற்று, அந்த துறவியுடன் புறப்பட்டான்.

இருவரும் பல நாட்கள் நடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள்.

அப்போது, அந்த நாட்டில் காணும் இடம் எங்கும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர் மக்கள். அந்த நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம் நிகழ்ந்து கொண்டிருந்ததுதான் அந்த உற்சாகத்திற்கு காரணம். சுயம்வர மண்டபத்திற்கு அரசனும், அந்த அனுபவத் துறவியும் சென்றனர்.

சுயம்வரத்திற்கு காத்திருந்த இளவரசி உலகப் பேரழகியாக இருந்தாள். அவளை மணந்து கொள்பவன், அவளது தந்தைக்குப் பின் அந்த நாட்டின் அரசனாவான் என்பதால், தங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் பல நாட்டு இளவரசர்களும் அங்கே வந்திருந்தனர்.

தனக்கு ஏற்றத் துணையாக பேரழகன் ஒருவனை தேடினாள் இளவரசி. அங்கு வந்திருந்த யாரையுமே அவளுக்கு பிடிக்கவில்லை.

அப்போது, சுயம்வர மண்டபத்தினுள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும், அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது, சூரியனே வானத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தது போல் இருந்தது. அவர் அருகே வந்த இளவரசி, கையில் வைத்திருந்த மாலையை அவரது கழுத்தில் போட்டு விட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்துறவி அதிர்ச்சி அடைந்தார்.

"என்ன முட்டாள்தனம் இது? நான் ஒரு துறவி. எனக்கென்ன திருமணம்?" என்று கூறி, இளவரசி அணிவித்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதற்குள், அந்த இளவரசி அந்த இளம் துறவி மீது அளவற்ற காதல் கொண்டு விட்டாள். "அவரையே மணப்பேன். இல்லையேல் உயிர்த் துறப்பேன்" என்று உறுதியாக கூறிவிட்டாள். அந்த இளம் துறவியை அழைத்துவர அவர் பின்னாலேயே சென்றாள்.

அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசனும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி பின தொடர்ந்தனர்.



இளவரசியை மணக்க விரும்பாத இளம்துறவி ஒரு காட்டுக்குள் புகுந்தார். இளவரசியும் அங்கே சென்றாள். அனுபவத் துறவியும், அரசனுடன் அங்கே சென்றனர்.

காட்டுக்குள் புகுந்த இளம்துறவிக்கு ஏதோ ஒரு வழியில் நுழைந்து மறைந்து விட்டார். இளவரசியால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது, அவளை பின்தொடர்ந்து சென்ற அனுபவத் துறவியும், அரசனும் அவள் அருகில் சென்றனர். "அழாதே ராஜகுமாரி! நீ வெளியே செல்ல நாங்கள் வழிகாட்டுகிறோம். இப்போது இருட்டி விட்டதால் நாளை காலை வழி காட்டுகிறோம்" என்று கூறி, அவள் அழுகையை நிறுத்தினர்.

ஒரு பெரிய மரத்தின் அடியில் மூன்று பேரும் தங்கினர். அந்த மரத்தில் ஒரு ஆண் குருவி, தன் இணையான பெண் குருவியுடனும், 3 குஞ்சுகளுடனும் வசித்து வந்தது.

மரத்துக்கு கீழே வந்து தங்கிய 3 பேரை பார்த்ததும், ஆண் குருவி பெண் குருவியிடம், "அன்பே... நம் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்வது? இது குளிர்காலம் வேறு. நாம் நெருப்புக்கு என்ன செய்வது?" என்று கேட்டுவிட்டு எங்கேயோ பறந்து சென்றது.

சிறிது நேரத்தில் ஒரு மரக்குச்சியை எடுத்து வந்து, மரத்தின் அடியில் இருந்த 3 பேருக்கும் முன்னால் போட்டு தீ வளர்த்தது. "என் உடலை அவர்களைக்கு உணவாக தரப்போகிறேன்" என்று பெண் குருவியிடம் கூறிவிட்டு, ஆண் குருவி அந்த தீக்குள் குதித்து உயிர்விட்டது.

"வந்திருப்பது 3 பேர். அவர்களுக்கு எப்படி பசி அடங்கும்?" என்று யோசித்த பெண் குருவி, தானும் அதில் விழுந்து உயிர்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, 3 குஞ்சுகளும், "பெற்றோர் பணியை தொடர்வதுதான் நம் கடமை" என்று முடிவெடுத்து, அவையும் தீக்குள் குதித்து மாண்டு போயின.

நடந்ததைக் கண்டு திகைத்த அனுபவத் துறவி, அரசன், இளவரசி மூன்று பேருக்கும் தீக்குள் விழுந்து இறந்த குருவிகளின் உடலை தீண்டக்கூட மனம் வரவில்லை. பொழுது விடிந்ததும் அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குள் வந்தனர்.

இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, தங்கள் நாட்டுக்கு திரும்பினர் அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசரும்.

பின்னர், அனுபவத் துறவி மன்னரிடம், "மன்னா! நீ சிறந்த இல்லற வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த பறவைகளைப் போல் எந்த நொடியும் பிறருக்காக உன்னை தியாகம் செய்ய தயாராக வாழ வேண்டும். நல்ல துறவற வாழ்க்கை வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும், பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப்போல் இருக்க வேண்டும். இல்லறமும் சரி, துறவறமும் சரி. அவற்றுக்கான தர்மத்தில் இருந்து நழுவாமல் இருந்தால், அவை இரண்டுமே உயர்ந்தவைதான்" என்றார், அனுபவத் துறவி.

உயர்ந்தது இல்லறமா? துறவறமா? என்பதை புரிந்து கொண்டான் அரசன்.

சுவாமி விவேகானந்தர் சொன்ன கதையைப் படித்து அனுப்பியவர்:

- நெல்லை விவேகநந்தா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p95.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License