நாம தேவர் என்ற ஞானி சில ஞானிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அவர்களுள் கோராகும்பர் என்பவரும் இருந்தார். அவரது தொழில் மண் பாண்டங்கள் செய்வது.
நாமதேவருக்கு தன் ஞானம் பற்றி சிறிது செருக்கு உண்டு.
அவர் கோராகும்பரைப் பார்த்து, "நீங்கள் செய்யும் மண் பாண்டங்கள் நன்றாக வெந்து விட்டதா? என்று கையினால் தட்டிப் பார்த்தே கண்டுபிடித்து விடுவீர்கள் அல்லவா?"என்று கேலியாகக் கேட்க, கோராகும்பரும் ஆம் என்று சொன்னார்.
"அப்படியானால் இங்கே உள்ள அனைத்து ஞானிகளையும் உங்கள் கையால் தட்டிப் பார்த்து, அவர்கள் பக்குவம் அடைந்து விட்டார்களா? என்று கூறுங்கள்" என்றார் நாமதேவர்.
கோராகும்பரும் ஒவ்வொருவர் தலையிலும் தன் கையால் தட்டிக் கொண்டே வந்தார்.
நாமதேவரின் தலையிலும் அவர் தட்டியபோது, அவருக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது.
"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையேத் தட்டிச் சோதிப்பாய்?” என்று நாமதேவர் கோபத்துடன் கேட்டார்.
கோராகும்பர் அமைதியாகச் சொன்னார்:
“இந்தப் பாண்டம் மட்டும் இன்னும் சரியாக வேகவில்லை”