ஒரு தளபதி அடுத்த நாட்டு மீது படையெடுக்க தன வீரர்களுடன் கப்பலில் போய் இறங்கினான்.
இறங்கியதும் முதல் வேலையாகத் தாம் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
படை வீரர்கள் திடுக்கிட்டனர்.
தளபதிஅப்போது சொன்னான்,''நாம் நம் எதிரிகளை வென்று அவர்களுடைய கப்பலில் ஊர் திரும்பலாம்''
வீரர்களுக்கு சூழ்நிலை புரிந்தது.
தோல்வி அடைந்தால் ஊர் திரும்பக் கப்பல் இல்லை. எதிரியும் சும்மா விட மாட்டார்கள். போராடி வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து, வெறியுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றனர்.
சூழ்நிலையை உருவாக்கியது தளபதி தானே?
'சூழ்நிலை சரியில்லை' என்று சிலர் சொல்வார்கள். சூழ்நிலையை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்.