மரணம் எனும் பொற்சாவி

வாழ்வில் மூன்றிலொரு பங்கு தூக்கத்தில் கழிந்தாலும் மரணம் என்ற சொல் மனிதனை அழ வைக்கிறது.
- பைரன்.

நாம் பிறக்கும் போதே இறக்க ஆரம்பித்து விடுகிறோம். முடிவு தொடக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
- மனிலியஸ்.

தவிர்க்க முடியாத ஒன்றைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்? இறப்பு வருவதற்கு முன்பே ஏன் இறக்கிறீர்கள்?
- மகாத்மா காந்தி.

மரணம் ஒரு மனிதனை அழித்துவிடும்; ஆனால், மரணத்தைப் பற்றிய எண்ணம் வாழ வைக்கும்.
- ஈ.எப். பார்ஸ்டர்.

மரணம் தவறு என்று மறுத்துப் பார். மரணம் நீயே தவறென்று மறுத்துவிடும். அவ்வளவுதான்.
- ஜவான் துர்கநெவ்.

நிலைப்பேருடைமை என்பது மாளிகையின் பொற்சாவிதான் மரணம்.
- ஜான் மில்டன்.

மரணத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் இப்போது பரிகாரம் உள்ளது.
- பிகெல் - டி - கெர்வெண்டஸ்.

மரணத்தை விட மிக அழகான நிகழ்ச்சி வேறெதுவும் நடக்க முடியாது.
- வால்ட் விட்மென்.

முதலில் நமது இன்பங்கள் மடிகின்றன. அடுத்தது நமது நம்பிக்கைகள். அதன் பின்பு நமது பயங்கள். இவையெல்லாம் இறந்த பின்பு கடன் பாக்கியுள்ளது. மண், மண்ணிடம் உரிமை கோருகிறது - நாமும் மரணத்தைத் தழுவுகிறோம்.
- பி.பி.ஷெல்லி.

அவலமான வாழ்க்கையை விட புகழ்பெற்ற மரணம் மேல்.
- யூதப் பழமொழி.

மரணம் யோகிகளை எதுவும் செய்வதில்லை. விழிப்புற்ற இதயம் தூக்கத்திற்கு அஞ்சுவதில்லை. உன் ஆத்மா உடலைவிட்டுச் சென்றால் என்ன? தோல் பழசாகிவிடும்போது பாம்பு அதை உறித்து எறிந்து விடுகிறது.
- தாரஷீ குஹ்.

மரணத்தைக் கொச்சைப்படுத்துவது ஒன்றில்தான் நம்மால் முழு வெற்றி காண முடிவதில்லை.
- ஆல்டஸ் ஹக்ஸ்வி.

மரணம் ஒரு முக்காடு. உயிருடன் இருப்பவர்கள் அதை வாழ்க்கை என்கிறார்கள். அவர்கள் உறங்கும் போது முக்காடு விலகி விடுகிறது.
- பி.பி. ஷெல்லி.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.