நல்வழி காட்டும் சில கேள்வி, பதில்கள்

ஆதிசங்கரர் அருளிய "பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா” என்ற நூலில் இடம் பெற்றுள்ள நல்வழி காட்டும் சில கேள்வி, பதில்கள்.
? எது இதமானது
! தர்மம்.
? எது நஞ்சு
! பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.
? எது மதுவைப் போல மயக்கம் உண்டு பண்ணும்
! பற்றுதல்.
? யார் கள்வர்கள்
! புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
? யார் எதிரி
! சோம்பல்.
? எதற்கு எல்லோரும் பயப்படுவார்கள்
! இறப்பு.
? யார் குருடனை விடக் குருடன்
! ஆசைகள் உள்ளவன்.
? யார் சூரன்
! கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
? எது மதிப்புக்கு மூலம்
! எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
? எது துக்கம்
! மன நிறைவு இல்லாமல் இருப்பது.
? எதை உயர்ந்த வாழ்வென்று சொல்வது
! குற்றங்கள் புரியாமல் வாழ்வது.
? எவை தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை
! இளமை, செல்வம், ஆயுள் போன்றவை
? யார் சந்திரனுடைய ஒளியைப் போல் பிறருக்கு இன்பம் தருவார்கள்
! நல்லவர்கள்.
? எது சுகமானது
! அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
? எது இன்பம் தருவது
! நல்ல மனதுடையோர்களின் நட்பு.
? எது மரணத்துக்கு இணையானது
! அசட்டுத்தனம்.
? எதை விலை மதிப்பற்றதெனச் சொல்லலாம்
! காலமறிந்து செய்யும் உதவி.
? எது இறக்கும் வரை உறுத்தும்
! ரகசியமாகச் செய்த பாவம்.
? எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
! துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள் போன்றோர்
? யார் சாது
! ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
? யார் உலகத்தை வெல்ல முடியும்
! சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
? யாரைத் தேவர்களும் வணங்குவார்கள்
! அனைத்தின் மீதும் கருணை உள்ளவர்கள்.
? யார் செவிடன்
! நல்லதைக் கேட்காதவன்.
? யார் ஊமை
! சரியான சூழ்நிலைகளில் ஏற்றதான இனிமைச் சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
? யார் நண்பன்
! பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
? யாரை விபத்துகள் அணுகாது
! மூத்தோர் சொல் கேட்டு நடப்பவர்கள், அடக்கமுள்ளவர்கள்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.